முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

MH17 பற்றிய ஆதங்கம்....கவிதையாய்.... வலுவான உறவு வற்றாத கண்ணீர்

கவிதை:    வலுவான உறவு வற்றாத கண்ணீர்                        வே.ம.அருச்சுணன் – மலேசியா  விடியா காலைப் பொழுதில் இடியாய் வந்தே இதயத்தைத் துளைத்தே மக்களைத் துடிக்க வைத்தே கண்ணீர் கடலில் மிதக்கவைத்தாய்............! இறைவா இதுவென்ன அடுக்கான சோதனைகள் ? மாதங்கள் நான்கு நகருவதற்குள் மற்றுமொரு சோதனையா............... ? வண்ணச்சிறகுகள் பூட்டி சிங்காரமாய் வானில் கம்பீரமாய் வலம் வரும் மாஸ்சே நீ கயவர்களின் சதியால் தூளாகி மண்ணில் சிதறியக் காட்சிக் கண்டு மனம் இனம் , மதம் , மொழி பாராமல் பதறாத மலேசியர் யாருமுண்டோ........... ?             உலக மக்கள் பலரை வாஞ்சையோடு இரண்டு சிறகால் மலேசிய மண்ணின் ம ணம் நுகர்ந்திட ஆவலாய்ப் பறந்து வந்தாய் வஞ்சகரின் கணைகள் உன் சிறகொன்றை நடுவானில் சிதைத்தார் சிற்சில வினாடிக்குள் 295 ஆத்மாக்கள் வயல் காட்டில் அனாதைகளாய்ப் பிணங்களாய்...

கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை : மனிதம் வாழ்விக்க வந்தவனே

கவிதை:                                                               மனிதம் வாழ்விக்க வந்தவனே                                            வே.ம.அருச்சுணன்  இந்த யுகத்தில் நீ  வாழ்ந்ததில் பெருமையும் பேறும் பெற்றது உலகம்...........! பிறவிக்கவிஞ்சனே உன் அருட்கொடையால் உலகம் வாழ்ந்தது மனிதம் உச்சத்தில் கோலோச்சி புரிந்தது.........! உன் அமர காவியங்களால் தமிழின் பெருமை விண்ணை முத்தமிட்டது உன் கவிதை வரிகள் மனிதனின் வாழ்வை நீட்டியது கயவனைப் புத்தனாக்கியது.........! களவையும் கற்று மறந்தவன் நீ கபோதிகளுக்கு வலுக்கும் சேற்றில் ஊன்றுகோல் தந்தவன் நீ தாயை மறந்தாலும் உன் தர்மத்தை இகழ்ந்திட யாரும் முயன்றதில்லை இறைவன் உன்னில் உலாவந்ததை...