முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:        சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்     
            இலக்கிய குரிசில் மா.இராமையா
                         
                                     வே.ம.அருச்சுணன்                                       

சங்ககால இலக்கிய
சாரளில்
மனிதன் புத்தனானான்
புடம் போட்ட தங்கமானான் 
கறையின்றி உயர்ந்து நின்றான்.............!

சிலம்புக்கு உயிர் கொடுத்த
இளங்கோ
நீதியைப் புகட்டிச் சென்றார்
மலேசியத் தமிழ் இலக்கியத்தில்
மா.இராமையா
தூணாய் நிலைத்து நின்றார்.......!

எண்பத்தாறிலும்
தடி ஊண்றா இளைஞராய்
இலக்கியம் படைக்கிறார் 
தமிழன்னை மனம் குளிர
நூல்கள் வெளியீடுகள் செய்கின்றார்........!
தொய்வில்லா எழுத்தாலே
தேமதுர தமிழோசை
உலகமெல்லாம் பரப்புகின்றார்.
மலேசியத் தமிழ் இலக்கியம்
உயர்வை உலகத்தார் போற்றுகின்றார்...........!

படைப்புகளை நூலாக்கும்
முயற்சிதனை எழுத்தாளர்
மரபாகக் கொள்ளுதல் வேண்டும்
மணியான கருவூலங்கள்
மண்ணில் தவழ வேண்டும்
மறைந்தாலும் பெயர் சொல்ல
நூல்கள் வேண்டும் வேள்வியை
நயம்படச் செய்தவர்
பெரியவர் மா.இராமையா..........!

இலக்கிய வானில்
சுதந்திரமாய்ச் சிறகடித்துப் பறந்து 
கதைகளையும் காவியங்களையும்
விதைகளாய் இம்மண்ணில் பதியமிட்ட
பாசத்துக் குரிய மா.இராமையா
பாராட்டுக்குரியவர்................!

பல ஆண்டுகள்
நலமுடன் வாழ வேண்டும்
தேன் சிந்தும் படைப்புகள்
தமிழ்த்தாயின் மனம்
பல்லாண்டுகள் குளிர வேண்டும்...............!

வாழ்த்த நமக்கு வயது
போதாது என்றாலும்
பெரிய மனசு இருக்கிறது
அதுவும் கடல் அளவு
மனதார வாழ்த்துகின்றோம்
வாழ்வீர் பல்லாண்டு......!


முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...