கல்விப் பெருந்திட்டம் 2013 -2025 மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப , அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு. ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்
அன்பானந்தனார் விருது பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 1978இல் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் எழுதியவர்தானே அந்தப் பெருமகனார்.
பதிலளிநீக்குஅவர் கலந்து கொண்டு எழுதிய அந்த “மறைமலையடிகளார் பிள்ளைத் தமிழ்” எழுதும் போட்டியில் நானும கலந்துகொண்டு (எனது 19வயதில்) எழுதினேன். மொத்தம் கலந்துகொண்ட 12 பேரில் அன்பானந்தனார் முதலிடமும், அண்மையில் மறைந்த புலவர் இறைக்குருவனார் இரண்டாமிடமும், தமிழண்ணலார் மூன்றாமிடமும் நான் நான்காமிடமு் பெற்றோம். இந்தத் தகவலையே அன்பானந்தனாரின் “மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலில்தான் பார்த்தேன்.
எனது வலைப்பக்கத்தில் எனது மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். இயலுமேல் பாருங்கள்.
http://valarumkavithai.blogspot.in/
மீண்டும் வாழ்த்துகளும், நன்றிகலந்த வணக்கமும்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை - 622 004
நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு