முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்துகாட்டுங்கள்


புதுக்கவிதை:                வாழ்ந்துகாட்டுங்கள்          14.11.2012
                     வே.ம.அருச்சுணன் - மலேசியா    
பாட்டன் வாழ்ந்த காலம்
சோற்றுக்காகக்
காகங்களாய்ப் பறந்த காலம்
சோறு கண்ட இடம் சொர்கம் என்றே
வெந்ததைத் தின்று மாண்டாரர்
வாழ்வே மாயம் என்றார்
சோறு போட்டவரே தெய்வம் என்றார்.......!

படிப்பென்றால்
அது என்னவென்றே
படுகுஷியாய்க் கேள்விக் கேட்டாராம்
உண்மை அறிந்தபின்
அதுவெல்லாம் நமக்கில்லை என்றே
வெகு தமாஷாகக் கெக்கலித்தாராம்
சோற்றுக்கே வழியைக் காணோமாம்
கெட்டக் கேட்டுக்குப்
படிப்பு ஒன்னுதான் குறைச்சல் என்றாராம்.....!

 ஹ...ஹ....ஹா...!
என்னே அட்டகாசமான வெடிச்சிரிப்பு
கூடிக்கூடிக் கதை அளந்தார்
வெட்டிப்பேச்சில் நிலை மறந்தார்
அடுத்தவன் கதையைக் கூடாரம் போட்டுப்
 கதகதப்பாய்ப் பேசுவதில்
பட்டிமன்றம் வைத்தே
அற்பச் சுகத்தில்
நிலவைத் தொட்டார்.....!

போதுமடா சாமி......
நம்ம  பாட்டன் பூட்டன் கதையெல்லாம்
கேட்டது போதும்
ஏமாளிகளும் கோமாளிகளும்
வாழ்ந்து மண்ணாய்ப் போனதை
நினைவில் நிறுத்தி
வல்லான் வகுத்ததே வழி
என்பதைச் சிந்தையில் புகுத்தி
புதுமையாய்ப் பிழைத்திடுவீர் இளையோரே.......!

நாளைப் பொழுதை
வளமுடன் அமைக்க
திரட்டுகச் செயல் வீரர்களை ஒன்றாய்ப்
புத்தாக்கத்தை உயிரில் நனைத்து
அடுத்தத் தலைமுறை
வாழ வடிவமைப்பீரே.....!

உன்னை நம்பி இருக்குது உலகம்
நன்மை செய்திட இன்றே
முந்திடல் சாலவும் நன்றே.......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...