முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் பூமியை மாசு படுத்தாதே....!



எங்கள்  பூமியை  மாசு  படுத்தாதே.....!       

வே.ம.அருச்சுணன் 

கொடுங்கோலனே,
நீ அழியும் காலம்
வெகு தொலைவில் இல்லை.....!
உரிமைக்காகப் போராடிய
ஆன்மாக்களை
அநியாயமாகக் கொன்று தீர்த்தாயே
புத்தம் பரவிய நாட்டின்
தலைமகனா நீ....?

மனிதத்தன்மையற்றவனே
நீ விரைவில் அழிவாய்
இது தமிழர்களின் சாபம்
பாவியே.....ஈனனே.....!

எங்கள் பூமி  புண்ணிய பூமி
அத்துமீறி நுழைந்தால்
எங்கள் பூமித்தாய்
உன்னை அழித்துவிடும்.....!

எங்கள் புண்ணிய பூமியில்
உன் கால்பட்டு
புனிதப் பூமியைப் பாழ்படுத்தாதே...!

இது தொடக்கம்தான்
உலகில் நீ  எங்கு சென்றாலும்
தமிழ் விந்துக்கள்
உன்னை சுட்டெரிப்பர்.....!

உலகில்
நீ இருக்கும் வரை
மரண பயத்தால் உன்
மண்டை வெடிக்கும்......!

அரசன் அன்று  கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இந்த  நியதி
உன் வாழ்வில்  நடப்பது
நிதர்சனமான உண்மை.....!

உயிரை ஒய்யாரமாகக்  குடித்தவனே
நீ உருகுழைந்து  போவாய்
இது சத்தியம்...!


    arunveloo@yahoo.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...