முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ப்போராளிகள்


புதுக்கவிதை:             தமிழ்ப்போராளிகள்                    
         வே.ம.அருச்சுணன் – மலேசியா
பன்னிரண்டு  வயதினிலே
கடின  உழைப்பாலே
யூ.பி.எஸ்.ஆர்  தேர்வில்  ஏழு  ஏக்கள்  பெற்று
அரிய  சாதனைப்  படைத்தாய்
தமிழ்  அன்னை  உன்னை
மனம்  நிறைவுடன்  வாழ்த்தும்.....!

தாய்மொழியைக்  காக்க  வந்த
இளம்  தமிழ்ப்போராளியே
நீ  எதிர்கொண்ட  முதல்  சோதனையிலேயே
வெற்றித் திலகத்தைச்  சூட்டிக் கொண்டாய்
இனி  வெற்றிகள்   உன்னைத்  தழுவட்டும்
தடையின்றி  சாதனைகள்  தொடரட்டும்......!

உன்  வெற்றியால்
தமிழ்மொழி    ஆலமரமாய்
இந்நாட்டில்   செழித்து  வளரும்
தமிழர்  உள்ளங்களில்   செம்மொழியாய்  
அரியணையில்  அமரும்
ஓங்கி  நிற்கும்  தமிழ்ப் பள்ளிகள்
அடுத்த  தலைமுறைக்கும்
தமிழனின் புகழுரைக்கும்......!

தமிழ்  சோறு  போடுமா......?
என்போருக்கு  தமிழ்  எப்போதுமே
உயிர்  கொடுக்கும்
தமிழனின்  அடையாளத்தை  உலகுக்கு
உரக்கக்  கூறும்.......!

தமிழை  மறந்தோன்
தாயை   மறந்தவனாவான்
தமிழை   இகழ்ந்தவன்  
தாயை    இகழ்ந்தவனாவான்
தமிழ்ப்போராளியே
இனி  உன்னால்  மட்டுமே   தமிழ்  வாழும்.....!

நெஞ்சை  உயர்த்திக்காட்டு
தமிழ்ப்பால்   உண்டோன்
உலகை   ஆளப்பிறந்தவன்   என்பதை
ஞானத்தால்  உணர்த்திடு.....!

உன்  வெற்றிக்கு  வித்திட்ட
மாதா,பிதா,குரு,தெய்வம்
ஆகிய  நால்வரை  மறவாமல்  வணங்கிடு
அகிலம்  உன்னை   வாழ்த்திடும்.........!

                                       *******************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...