முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் தோட்டம் (புது கவிதை )



புதுக்கவிதை:                  எங்கள் தோட்டம்       
                வே.ம.அருச்சுணன் – மலேசியா 

நான் பிறந்த தோட்டம்
அன்று தேனாய் இனித்தது
அங்கு வாழ்ந்தவர்கள்
யதார்த்தவாதிகள்
நேர்மை மிக்கவர்கள்
அன்பின் பிறப்பிடங்கள்
 கர்ணனின்  ஆத்மாக்கள்
அகிம்சம் பேசும் மகாத்மாக்கள்
நீதியைப் போற்றும் மனுநீதிச்சோழன் பரம்பரைகள்......!

ஓங்கி நிற்கும்
இரப்பர் மரங்களின் பசுமையை
நீரோடைகளின் தூய்மை
சலசலக்கும் குளிர்ந்த நீர்
நீரிலே நீந்தி மகிழும் மீன்கள்
ஆற்றிலே நீச்சலடிக்கும் இளசுகள்
வெள்ளத்தில் கட்டு மரங்களின் சாகசப் பயணம்.......!
கோவில் திருவிழாக்கள்
தோட்டத்தைப் பவனிவந்து
அருள் வளங்கும் மாரியம்மன்
பக்திப் பரவசத்தில் மக்கள் கூட்டம்......!

இரண்டு தமிழ்ப்படங்களை
ஒரே இரவில் பார்த்து
மறுநாள் தோட்டமே
உறக்கத்தில் மூழ்கிப்போகும்
இனிய நாள் தூக்க நாள்
மக்களுக்குப் பொன்னாள்…….!



விளையாட்டு மைதானத்தில்
மாலை வேளையிலே
இளைஞர்களின் வீரவிளையாட்டுகள்
பருவ மங்கைகளின்
மீன்விழிப்பார்வைகள்
கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு
ஏங்கி நிற்கும்
காளையர்களின் உற்சாகக் கூட்டம்
இருமனங்கள் இணைந்தபின்
மணமேடை கண்டு
பெரியோர்களின் ஆசியில்
வாழ்வைத் தொடங்கும்
இளைஞர் கூட்டம்
பார்த்து மகிழும் காட்சி பரவசமன்றோ.....!
இடுகாடு  இருந்த இடத்திலே
கேளிக்கை மையங்கள்
உலகமே இடுகாட்டில்
ஓடியாடி விளையாடி  மகிழுது......!

நம்பத்தான் முடியவில்லை
நாம் வாழ்ந்த பூமி
கண் முன்னாடியே
கண நேரத்தில்
மாயமாகிப் போய்
வரலாறு
மறந்துவிட்டதே......!
   
நான் வாழ்ந்த தோட்டம் இன்று
அடிச்சுவடே
இல்லாமல் போனது
கண்கள் இரத்த ஆறாகிப் போய் விட்டதே.....!

அந்தநாள்
மீண்டும் வருமா
இனிய தென்றல் மீண்டும் வீசுமா......?

                                    முடிந்தது

      e-mail:  arunveloo @ yahoo.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...