முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக....!





புதுக்கவிதை:   புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக...!
  
                           வே.ம. அருச்சுணன்    
அதிர்வையும் அனுபவங்களையும் தந்த
2012 ஆம் ஆண்டே விடை பெறுக
பூத்துக் குலுங்கப் போகும் 2013 ஆம் ஆண்டே
நம்பிக்கை மலர்களை
உள்ளத்தில் நிறைவாய் ஏற்றி
வரவேற்பு கூறுகிறோம்
வளமான வாழ்வை வஞ்சகமின்றி
எனது சமுதாயத்திற்குத் தந்திடுக.....!

பட்ட துன்பம் போதும்
செமத்தியாய் ஏமாந்தது போதும்
மரம் போல் ஏணியாய் நின்றது போதும்
துணிவாய் ஏணியில் திடமாய் ஏறி
வெற்றி வானில்  பயணிக்க
வந்திடுக  புத்தாண்டே....!

வாழ்வு தந்த பொன் நாடும்
தாய் தந்த செம்மொழியும்
உள்ளத்தில் வைரமாய் மின்னிட
ஒற்றுமை மக்கள் மனதிலே
தேனாய்த் பாய்ந்திட
விரைந்து வந்திடுகப் புத்தாண்டே....!

நாட்டில் நல்லவைப் பிறந்திட
வல்லமை தாராய்ப்
பிணக்குகள் இன்றி                                                         
ஒருதாய் மக்களாய்
ஆட்சிக்கட்டிலில்
பேதமின்றி சமமாய்ப் பங்கு தந்து
பல்லின மக்களும்
மகிழ்ந்திட நிறைவான
வாழ்வைத் தந்திடுகப் புத்தாண்டே....!


பாசமும் நேசமும் மக்களிடம் பல்கிட
பல்லின மக்கள் சகிப்புடனே வாழ்ந்திட
வந்திடுக புத்தாண்டே.....!

                           முடிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சா.ஆ.அன்பானந்தன் விருது”

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...