முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழைப் படி பக்தனே





புதுக்கவிதை:         தமிழைப்  படி  பக்தனே                         27.1.2013   
                                         வே.ம.அருச்சுணன் 

நாட்டின் தொலைதூரத்திலிருந்து
என்னைப் பக்தியோடு காண வந்த பக்தனே
உன்னை ஒன்று கேட்பேன்
தெளிவாகப் பதில் கூறு......!

தமிழ்க்கடவுளே......!
பத்துமலை முருகனே
அன்பின் பிறப்பிடமே
என் தெய்வமே
உண்மைப் பக்தனான என்னிடம் கேள்வியா......?
என்ன சொல்கிறாய் முருகா...?
எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே
என் பக்திமீது சந்தேகமா முருகா....?
விளக்கமாகக் கூறுங்கள் 

பக்தனே......!
நான் சொல்லப் போவதைக் கவனமுடன் கேள்
நீ பேசும் தமிழைக் கேட்டேன்
தமிழை நீ உச்சரிக்கும் முறையக் கேட்டேன்
காதில்.......!
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறது......!

முருகா......!
இதுவென்ன சோதனை.......? 
என் தமிழ் உச்சரிப்பில் பிழையா....?
பக்தா.....உண்மையைக்கூறு
தமிழ்க்கடவுளான என்னை வணங்கும் பக்தனே
நீ தமிழ்ப் படித்தாயா......?
...................................................!

பக்தனே.........ஏன் மௌனமாகிவிட்டாய்.?
உன் உடல் ஏன் நடுங்குகிறது?.
ஏன் உன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டாய்?
நீ  தமிழ்ப்பள்ளிக்குச் சென்றாயா......?
அங்கு  முறையாகத் தமிழ்ப் படித்தாயா.....?

முருகா......உங்கள் முகத்தைப் பார்க்க
எனக்குத் தைரியம் வரவில்லை.....!
தமிழுக்குக் கடவுளாக வீற்றிருக்கும்
தங்கள் தமிழைப் படிக்காமல் போய்விட்டேன்
தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன்....!
என்னை மன்னியுங்கள் முருகா....!
தமிழ் மக்களுக்காக
நான் பாடியப் பாடல்களை
நீ படிக்காமல் போய்விட்டாயே
பயில  உனக்கு  மனம் இல்லையா......?
உன்னைப் பெற்ற தாய் பேசிய தமிழை
நீ  உதாசினம் செய்துவிட்டாயே
தமிழை மறந்தவன்
பெற்ற தாயை மறந்தவன் ஆயிற்றே......!

தமிழைப் பழித்தவனைத் தாய்
தடுத்தாலும் விடேன்  என்றாரே
புரட்சிக்கவி பாரதிதாசன்
அவர் கருத்தை மறந்து விட்டாயா...  ?

முருகா,
மதி கெட்டு கடமையை மறந்து விட்டேன்
வயிற்றுப் பிழைப்புக்காக
தாய்மொழியை மறந்துவிட்டேன்
என்னை மன்னித்துவிடுங்கள்
என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்
உங்களை  நம்பி  வாழ்கிறேன்......!
இப்போது நான் திருந்திவிட்டேன்
என் பிள்ளைகளை  இனி  மறக்காமல்
தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்புவேன்
மெத்த படித்த
ஒவ்வொரு தமிழரும் தம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்பச் சொல்லி
நேரில்  சென்று  எடுத்துச் சொல்வேன்.......!

நம்மிடையே  நிலவும் பேதங்களை மறந்தது   
நமது சகோதரர்கள்  அனைவரும்  இங்கே
தமிழுக்காக   இணைவதற்கு
கடுமையாக  உழைப்பேன்
என் பங்கிற்கு தோள் கோடுப்பேன்
தேவைப் பட்டால்
என் உயிரையும்  கொடுப்பேன்....!

                                              ********************
  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சா.ஆ.அன்பானந்தன் விருது”

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...