முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமன் மச்சான் விளையாட்டு


            மாமன் மச்சான் விளையாட்டு             
                         வே.ம.அருச்சுணன் 

மாமன் மச்சான் விளையாட்டை
மிகவும் பக்குவமாகப்
பன்னிரண்டு முறை விளையாடியது
போதாதென்று விளையாட்டுக்காட்ட
பதின்மூன்றாவது முறையும் படையுடன்
புறப்பட்டுவிட்டார் இதோ சிவாஜி போஸ்  
இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை
மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....!

தமிழனைக் குழியில் தள்ள
பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே
முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான்
வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான்
நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால்
நாளுங் கெட்டத் வீரத்தமிழன்
வெற்றிவேல்,வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான்
இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த்
தமிழன் முதுகில்  பவனிவரலாம் அல்லவா?

தேர்தல் கொள்ளையுரையைப்
பவிசுடன் அறிவிக்கிறார்
பக்கத்தான் மச்சான்
புத்திராஜெயாவே குறியாய் எண்ணி
அல்லும் பகலும் பாடாய்ப் படுகிறார்
புதுவாழ்வு பொத்துக் கொண்டு வரப்போகுது என்றே
மச்சான் பின்னால் சென்று
ஆள்சேர்த்தத் தமிழனுக்கு மீண்டுமொரு
செவினி அறை.....!

உலகில் தமிழனை வாழவிட்டது யார்?
பர்மா தமிழர்கள் கட்டியத் துணியோடு
நாட்டைவிட்டு விரட்டப்படவில்லையா?
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை
ஒரே நாளில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்
நம் கண்ணெதிரே கொன்று தீர்க்கவில்லையா?

இங்குள்ளத் தமிழன் என்பவன்
கைகட்டி, வாய்ப்பொத்தி, கக்கத்தில் துண்டை
அடைப்பவன் மட்டும் தானா?
மானம்,ரோசம் இல்லாதவனா?
அறிவற்றப் பிண்டமா?
ஓட்டுரிமை அற்றவனா?
நாட்டு வளர்சிக்கு ஒன்றுமே செய்யாதவனா?
சபா,சரவாக் மக்களுக்கு வளர்ச்சியுண்டு
பூர்வீக மக்களுக்கு நிலமுண்டு,உயர்வான கல்வியுண்டு
நிம்மதியான வாழ்வுக்கும் உத்திரவாதமுண்டு
ஆனால்,
இருநூறு ஆண்டுகள் முன்நாட்டை வளமாக்கிய
தமிழனுக்கு தேர்தல் வாக்குறுதித் தருவதில்
பே...பே....வா?

கண்கட்டி வித்தையெல்லாம் போதும் மச்சான்
புதுசா நீவேற நெய்பந்தம் உயர்த்திப் பிடிக்கவேண்டாம்
மாமன் மச்சான் விளையாட்டெல்லாம்
காட்டினது  போதும் மச்சான்
இனி நம் வாழ்வில் ஏமாற்றம் வேண்டாம்
நம்வாழ்வில் மாற்றம் காண
நமது உரிமையைக் காத்திடுவோம்
அணி திரண்டிடுவோம்....!

சுயநலப் பேர்வழிகள்
நம்மைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்துவதை
தடுத்திடுவோம்,விழித்திடுவோம்
நமது சந்ததி வளமுடன் வாழ்வதற்கு
உரிமையை எவ்வளவு விலை கொடுத்தும்
மீட்டெடுப்போம்
வாக்கை சரியாகப் பயன்படுத்துவோம்
இந்த வாய்ப்பை நழுவவிடோம்
நம்மைக் கருவறுத்தக் கொடியோர்களை
வேரறுக்கக் கைகொடுப்பீர்
வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பீர்
மானம் காக்க விரைந்து வாரீர்
இது நமது இறுதிப்போர       
உயிருள்ளவரைப் போராடவேண்டும்
ஓட்டுரிமை என்ன வென்று காட்டிடுவோம்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சா.ஆ.அன்பானந்தன் விருது”

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...