முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுச்சிக் கவிஞன் பொன்.நாவலன்

கவிதை:    எழுச்சிக் கவிஞன் பொன்.நாவலன்       29.9.2014
                           வே.ம.அருச்சுணன்

தன்மானக் கவிஞருள்
பொன்னான கவிஞன் பொன்.நாவலன்
சொந்தங்களைவிட சந்தங்களை
அதிகம் நேசித்தவன்
சந்தக்கவிஞராய் முகம் காட்டியவன்
எழுச்சியையும் மறுமலர்ச்சியையும்
தொய்வில்லாமல் தெளித்தவன்.................!

சுரதாவை வாசித்தவன்  
பாரதிதாசனாய் உருவெடுத்தவன்
இனமானக் கவிஞனாய்
ஒற்றுமையில் மக்கள் வாழ்ந்திட
நெருப்பாய்க் கவிதைகள் தந்தவன்...............!

நோய் வந்த போதும்
உந்தன் எழுத்துப் பயணம்
ஒருபோதும் நின்றதில்லை
மேடையில் கவிமுழக்கம்
கடுகளவும் குறைந்ததில்லை
ஏடுகளில் எழுதுவதும்
வானொலியில் கவி பாடுவதும்
நிற்கவில்லை............!

கிழவனையும் வாலிபனாக்கும்
உந்தன்  கவிதைகள் 
சமூகத்தை வழிநடத்தும்
எதிர்காலம் சிறக்கும் வரை
போராடச் செய்யும்................!

இனிய சொல்லும் அடக்கமும்
மனிதரை மதிக்கும் பண்பும்
உனது அடையாளங்கள்
எளிமையான வாழ்வும்
இன்னாது கூறலும் உன்னை
பண்பட்ட மனிதனாய்க்  கண்டோம்..........!

வீண் சவடால் என்றும்
கனவிலும் இல்லை
தோட்டத்தில் பிறந்து
ஏழ்மையில் உழன்றும்
நெறிதவறா உத்தமர் நீயன்றோ
வாழ்ந்த காலம் சிறிதே
சாதனைகளோ பெரிது..........!

நூல்கள் பலவும் வெற்றி
முழக்கமிட வெளீயீடு கண்டவன்
சென்ற பின்னும் உன்
பெயரைத் தவறாமல் சொல்லும்
இந்த இலக்கியக் குழந்தைகள்
வியக்கும் வண்ணம் உலகில்
புகழைப் பரப்பும் பொன்.நாவலனே
சாதிக்கப் பிறந்தவன்
சாதனைகள் புரிந்திட்டே
நெடும் பயணம் சென்றுவிட்டீர்
நா பலம் கொண்டவனே
மனித மனங்களில் என்றும்
நிலையாய் உயர்ந்தே நிற்பாய்
மலேசிய இலக்கிய உலகம்
ஆழமாய் நினைத்து மகிழும்
வாழ்வீர் பல்லாண்டு.............!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...