முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்பொறி கவிஞரே நீங்களுமா



கவிதை:    தீப்பொறி கவிஞரே நீங்களுமா   
                    வே.ம.அருச்சுணன் 

நாளும் கவிமழை பொழிந்த
தீப்பொறியே நீங்களுமா தீடீரென
எங்களை விட்டு
மறைந்து விட்டீர்.........!

என்ன கொடுமை
மண்ணின் மணம் பரப்பிய
இலக்கிய ஜாம்பவான்களின்
மரணித்தல் தொடர்கதை தானோ.........!

சிறுகதை மன்னன் மு.அன்புச்செல்வன்
நாவலாசிரியர் ப.சந்திரகாந்தம்
தேன்சுவைக் கவிஞர் சீனி நைனா
புதுமைக்கவிஞர் பொன்.நாவலன் 
தீப்பொறியாரே மனம் வலிக்கிறது
மறைவை ஏற்க மறுக்கிறது.....!  

மரபுக்காகவே பிறப்பெடுத்து
நற்கவி பல புனைந்தீர்
மரபை மீறும் கவிஞரைச்
சுட்டெரிக்கும் தீப்பொறியே
மரபுக்கவிதை தள்ளாடும் வேளையிலே
மண்ணை மறந்து விண்ணை நோக்கி
நெடும் பயணம் சென்றதேனோ........!

தீப்பொறியாய் சொற்கள் வெடித்தாளும்
யாருக்கும் தீங்கிழைக்கா
பிள்ளை மனம் உனக்கு
மணிக்கவிஞர் படைதனை நாட்டில்
திரட்டிவிட்டாய் உன் பணிதனைத்
தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர்
நிறைவான உந்தன் பணிக்கு
வணங்கி நிற்போம்...........!

கோம்பா ஆறு கவிதை
உன் முகவரி கூறும்
உந்தன் நெரிதனை உலகம் ஏற்கும்
கவிதனில் மூழ்கிட அறிஞரும்
உன் வழியில் விரும்பிச் செல்வார் 
கவிதையில் வாழ்வினைச் சொல்வதில்
வல்லோன் நீயன்றோ.........!

உன்னால் கவியுலகம் இங்கே
தலை நிமிர்ந்து நின்றது
கவிதைப்பயிர் வேரூன்றியது
மறைவால் உன் சிம்மாசனம்
வெற்றிடமாய்த் தெரிகிறது
வெறுமையைப் போக்கிட
இனி யார் வருவார்............!

வேற்றுலகம் சென்றாலும்
மரபு செழித்தோங்க வழிசொல் கவிஞரே
உங்கள் ஆத்மா சாந்தி பெறட்டும்
என்றும் எங்கள் மனம் கவர்ந்த கவி நீயன்றோ............!  


                              

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...