முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

    புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு     27.12.2014
                  வே.ம.அருச்சுணன் 

பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே........!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

மாயமாகிப்போன விமானம்
பீரங்கித் தாக்குதல்
வானில் சிதறிய செல்வங்கள்
மீண்டும் வருவார்களா நம்மோடு
மகிழ்வோடு உறவாடுவார்களா?
அந்த மரணத்துளிகள் 
கனவிலும் வேண்டாம்
ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........!

நம்பிக்கை ஒளிதரும்
2015 ஆம் ஆண்டே
நலம் சேர்க்க வாரீர்
நாடும் மக்களும் வளம் பெற
மலர் தூவி வாழ்த்துக........!

தமிழர்கள் இங்கே
ஒற்றுமையில் தலைதூக்கி
சோதனைகளைப் பொடியாக்கி
தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு
தமிழ் காக்கும் மொழியினராய்
சமயம் வாழ்விக்கும் நல்லோராய்
பொருளியலில் காலூண்றி
வாழ்தல் வேண்டும்..........!

நாட்டுச் சுதந்திரத்தில்
தமிழர் பங்கு பெரிதென்போம்
நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய்
பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்
நாடு வளர்ந்துவிட்டது
ஏணியாய் இன்னும் நாம் யாசகம்
புரிதல் அநீதியன்றோ..........?

அரசியலில் சுழியம் என்போம்
நாளுக்கொன்றும் ஆளுக்கொன்றும்
பேசியே கொல்கின்றார்
நம்பியவர் நட்டாற்றில்
பத்துவிரல்கள் மூலதனம்
சுயமுன்னேற்றம் வேண்டி
உழைப்போம் உயர்வோம்..........!

மாற்றம் ஒன்றே மாறாதது
வாழ்வின் நீதியை ஏற்போம்
வாழ்வை மாற்றுவோம்
சந்ததி நிலைப்பதற்கு
சிந்தனை செய்வோம்
இலக்கு வகுத்தல் நீதியென்போம்
கூடிவாழ்தல் கோடி நன்மை என்போம்
சாதனைப் படைக்கப் புத்தாண்டில்
உறுதி கொள்வோம்..........!

புத்தாண்டே புனித வாழ்வைத் தந்திடு
இனம் காக்க பூரிப்பாய் வாழ்த்திடு.......!

 email: arunveloo03@gmail.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...