முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘வந்தாய், வென்றாய், சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே’




                       வந்தாய், வென்றாய், சென்றாய்    
            செழுமைமிகு செர்டாங் முத்தே                   
                    

                          வே.ம.அருச்சுணன் 

வந்தாய், வென்றாய், சென்றாய்
நீ எடுத்த அவதாரமா?
உழைப்பு....உழைப்பு.....
உழைப்பவனே உயர்ந்தவன்
உலகுக்கு நீ உதாரணம்
எல்.முத்து நீ நல்முத்து.........!

உயிரும் உடலும்
இரத்த வியர்வையில்
தொண்டனுக்கும் நேரமுண்டு
உண்ண, உறங்க, உல்லாசம்
நேரமுண்டு, காலமுண்டு உனக்கோ
உறங்கத்திலும் வேலையுண்டு
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு
என்னே உன் நியதி......!

பொன்னை விரும்பும் பூமியிலே
தன்னை விரும்பும் மனிதனுண்டு
உன்னை விரும்பும் பிறவியுண்டு
மனிதம் விரும்பும் புத்தன் நீ
நல்லோர் சபைதனிலே
வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ
வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன்
மாசற்ற குடும்பத்தலைவன்.........!

வாழ்வில்
கட்டிடக் கலைஞனாய்ப்
பரிணாமத்தைக் கொண்டவனே
பிரமிப்பை ஏற்படுத்தியவன்
இலக்கியம் படைப்பிலும்
திகைப்பை ஏற்படுத்தினாய்
அவை என்றும் நிலைக்கும்
மலேசிய இலக்கியமாய்
தேமதுரத் தமிழோசையாய்
உலகமெல்லாம் எதிரொலிக்கும்
இரட்டைக் கோபுரமாய்
நிலைபெற்று வாழ்வாய்........!

உயர்விலும்
ஒருவரையும் மறந்ததில்லை
உறவுகளைத் தகர்த்ததில்லை
தரம் கெட்டோரை அண்டியதில்லை
நன்மக்களைப் பெற்றாய்
குறையில்லா வாழ்வு தந்தாய்
மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
மமதையில்லா மனிதர் நீ......!

கோவில் என்றாலும்
கல்விக்கூடம் என்றாலும்
உன் பங்கு ஓங்கி நிற்கும்
நாடியவர் உள்ளம் மகிழ்ச்சியில்
எந்நாளும் துள்ளும்........!

மலேசிய எழுத்தாளர்கள்
அவர்களின் எழுத்துகளை
உரமிட்டு வளர்த்தாய்
உனது மீளா உறக்கம் 
உள்ளத்தை நறுக்கும்
எல். முத்தே; எங்களின் சொத்தே
இறவாப் புகழ் பெற்றவனே
உன் ஆத்மா சாந்தி பெறட்டும்.......!

                                              முற்றும்




                 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...