முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை: மேற்கு சூரியன் முத்தமிடுவான்


 

கவிதை:             மேற்கு சூரியன் முத்தமிடுவான்       17.1.2015                                                        வே.ம.அருச்சுணன் - மலேசியா 

 

சிறப்புக்குரிய உலகத்தமிழர்

வெட்கம்,மானம்,ரோசம் மிகுந்தவர்கள்

நிகரில்லா வாழ்வுக்கு

அன்னியோனியமானவர்கள்........!

 

ஆனால்......! ஆனால்......!

மலேசியத் தமிழர்கள்

புதிரானவர்கள் புரியாதவர்கள்

எவரைப்பற்றியும் கவலைப்படாத நாரதர்கள்..........!

 

சஞ்சிக்கூலிகளின் வரலாற்றை

காற்றில் பறக்கவிடுபவர்கள்

பெற்ற தாயை நடுவீதியிலே நிற்கவைத்துக்

கரகாட்டம் போடும் தற்குறிகள்

மொழி மறந்து இனம் துறந்து

சொந்த பணத்தில் சூனியம் வைத்து

கொக்கரிக்கும் கழுத்திழந்த சேவல்கள்

சுயநலப்பேர்வழிகள்.........!

 

யார் எப்படி போனால் என்ன

தான்மட்டும் வாழ வேண்டும்

சாதிச் சுனாமியில் சிக்குண்டு

உருகுழைந்து மட்டிகள்

சொல் புத்தியோ,சுய புத்தியோ

பகுத்தறிவிழக்கும் பிண்டங்கள்

வேடம் தரிக்கும் குள்ள நரிகள் பல்லினமும்

எள்ளி நகையாடச் செய்யும் கெடுமதியினர்............!

 

வள்ளுவனை முற்றாய் மறந்தவர்கள்

வாழ்வைச் சூதாட்டமாக்கியவர்கள் பல்லாண்டு

நல்லொளி காணா உணர்வு மங்கியவர்கள்...........!

 

செந்தமிழைக் கற்க கையேந்தும்

இவனா தமிழன் வெட்கக்கேடு

இவன் திருந்த இரண்டாயிரமாண்டுகளாகும்..........!

 

இனவுணர்வை அழிக்கும் அரசியல்

கோணங்கிகள் ஒழிந்தால் மட்டுமே இங்கே

தமிழன் நிலைப்பான் இன்றேல்

மேற்கு சூரியன் முத்தமிடுவான்............!

                                          முற்றியது           

                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...