முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்க் கொல்லி கொரோனாவே



கவிதை:           உயிர்க் கொல்லி கொரோனாவே        
                     வே.ம.அருச்சுணன் 

உயிர்க்கொல்லி  கொரோனாவே  ஏன்வந்தாய்?
       ஊரையழிப் பதுனக்கு  சுகம்தருமா 
மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால்
       மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ?

பொறுப்பற்ற   அற்பர்களின்  செயல்தனிலே
       போர்தனில்  வீழ்வதுபோல் அழிகின்றாரே
மறுப்பேதும்  கூறாமலே  மாள்கின்றாரே
        மாமணியாய்ப்  பிறந்ததன்  பயன்யாது? 

உன்பொல்லா  குணத்தாலே  உலகமினி
       உருப்படியாய்  இருக்காதென  மனிதகுலமும்
நன்றேயினி  வாழ்தலும்  இயலாதென்றே
       நாதியற்றே  மடிதல்தகுமா கொரோனாவே...?

உண்மையாய்  உனைத்தீர்த்திட  கூடுகின்றார்
     உறுதிபடவே  கூறுகின்றார் நனிசிறந்த
கண்ணான  மருந்தாலே  உனைவீழ்த்த
     ஊக்கமுடனே இளையோரே எழுகின்றார்....!  

     E-mail: arunveloo03@gmail.com.
  
             
     

      
      
               


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...