முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பன்முகப் படைப்பாளர் அதிகைமணி


                              பன்முகப் படைப்பாளர் அதிகைமணி        26.4.2020
                                                வே.ம.அருச்சுணன்

கவிதையுலகில் தன்னிரில்லா கவிதைகளால் தனி முத்திரைப் பதித்து பன்முகப் படைப்பாளர் வெ.ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட அதிகைமணி அவர்கள் 17.4.2019 ஆம் நாள் மறைந்து ஓராண்டு நிறையொட்டி,அவரை நினைவும் வகையில் பல அரிய தகவல்களோடு  ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் குணசீலன் சுப்பிரமணியம் அவர்கள் விரிவான கட்டுரை எழுதிய அன்னாருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிள்ளான் வாசியான அவரை நான் பல வேளைகளில் சந்திப்பது வழக்கம்.தமிழ் மொழிச்சம்பத்தமான எனது சந்தேகங்களுக்குத் அவர் விளக்கம் தரும் பேராசானாகத் திகழ்ந்தவர்.எதையும் மிகத்தெளிவாகக் கூறுவார்.அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் விரும்பி வாசிப்பேன்.பணி ஓவ்வுக்குப் பின் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.எனினும் நண்பர் ஒருவரின் மூலம்2013 ஆம் ஆண்டு அவரை மீண்டும் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன் எனினும் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டார்.அவரது மறைவு மலேசிய  இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு  என்பதை இங்குப் பதிவு செய்கிறேன்.              
                                          -------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...