முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகையாளும் பொங்கலே வாழியவே...!

உலகையாளும் பொங்கலே வாழியவே        
                  வே.ம.அருச்சுணன்

இனிதாய்  வந்திடும் பொங்கலே
      உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே    
உலகமே   கொண்டாடும்  பொங்கலே
      உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே!

தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே
    தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே
பொங்கும்   தமிழரின்    பொங்கலே
      போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே!

மலையகம்  கண்டநற்   பொங்கலே
       மாண்பையும்  உயர்த்திடும்  பொங்கலே
மனமிறங்கி    மகிழ்ந்திடும்   பொங்கலே
       மாசுகொண்ட  சாதியழிக்கும்  பொங்கலே!

சத்தியமாய்   நலம்பயக்கும்   பொங்கலே
       சாதகமாய்  வாழ்த்தவரும்  பொங்கலே
தெம்புடனே  தீமையழி   பொங்கலே
         தமிழரிங்கே  செழிக்கனுமே  பொங்கலே!

பொங்கியெழு  வீரமுடனே  பொங்கலே
     போர்குணம் கொண்டெழு  பொங்கலே
தமிழரினம்  கூடிபொங்கும்  பொங்கலே
      தரமுயரவே  பொங்கிடுவாய்ப்  பொங்கலே!

பல்லினம்  மெச்சிடுமே   பொங்கலே
        பாசத்தினை  வளர்க்கனுமே  பொங்கலே
எந்நாளும்    இணைவோம்   பொங்கலே

         ஏற்றமேயினி  வந்திடுமே பொங்கலே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...