முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்மொழியும் சேமமும்



கவிதை:     செம்மொழியும்  சேமமும்               21.1.2020
              வே.ம.அருச்சுணன் 

செம்மொழிப்பாடல்  பாடுவதால்  சேமமாகுமே– இங்கே
       சேதாரமின்றி  வாழ்ந்திடலும்  உண்மையாகுமே...!     
வம்பிலாவாழ்  வுதனையேற்றலில்   உன்னதமாகுமே– இங்கே
        வான்முட்டும்   சீரியவாழ்வும்  நிலையாகுமே....!
தும்பியல்வாழ்    விங்கேநீக்கின்    செழுமையாகுமே- இங்கே
        தூற்றலில்லா   ஒருமைவாழ்வும்  உறுதியாகுமே....!
எம்மொழியாலே    ஒளியேற்றிநல்   வாழ்வும்வந்திடுமே- இங்கே
         ஏளப்பேச்சினைத்   துறப்பின்வாழ்வு   பொன்னாகுமே....!

மொழியாலே   ஒன்றாதல்நற்    பேரென்போமே- இங்கே
         மோதலில்லா வாழ்வேற்று  மகிழ்ச்சி கொள்வோமே....!
வழிபலவுளவே  இனிதேமொழி  நலம்வகுப்போமே-இங்கே
         வாடியபயிருக்குத்  தினமும்நீரூட்டி   வளர்ப்போமே....!
தொழிலுறவாலே  உரிமைவளர்ந்திட  நேசம்விதைப்போமே – இங்கே
         தோழமைக்குத் அன்னைமொழி  எந்நாளும்காப்போமே....!
வழியவரும்தேவி   சிரம்தாழ்த்தி  மகிழ்போமே- இங்கே
         வாழ்விழந்தோர்  செந்தமிழால் சீராவோமே....!

ஒற்றுமொழியாலே   இனயெழிச்சிதனை  ஏற்றுவோமே – இங்கே    
         ஓய்ந்திடாமலே  இனியமொழி  காத்திடுவோமே...!
வெற்றுமொழித்  தினிப்புகளை  மறுப்போமே - இங்கே
         வேற்றுமையில்  ஒற்றுமைகாணத்  துடித்திடுவோமே...!
பற்றுகள்பல  இருப்பினும் தாய்மொழியால் உயர்வோமே - இங்கே
        பாசத்தால் நேசத்தால் உடன்பிறப்புகள் வாழ்விப்போமே....!
முற்பகல் செய்யின் பிற்பகலில் மாற்றமே காணுவோமே- இங்கே
         மூத்தமொழியாலே உலகில்சிறந்தே நிலைப்போமே....!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...