முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!

                இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!         7.8.2014                    
                          வே.ம.அருச்சுணன்  - மலேசியா

இனிய பேச்சும்
நுண்ணிய கருத்தும்
தொலை நோக்குப் பார்வையும்
வலுவான கருத்தாலும்
பிறவிக் கவிஞராய் மனித மனங்களில்
தடம் பதித்த மாமணியே
திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?

கவியுலகின் கலங்கரை விளக்கே
கவியால் வான்புகழ் பெற்றவரே
உனது பிரிவால் கவியுலகம்
கலையிழந்து போனதே
கானக் குயில் குரல் இழந்தே
வாடுதல்  பொறுக்கலையே
கைபிடித்த வளர்ந்த குழந்தை
திசை இழந்து துடிக்குதே
கவிமழை பொழிந்த வானம்
காரிருளில் பொசுங்குதே.........!

உன்
தொல்காப்பிய உரைக்கு
மனம் குளிந்த மனங்கள்
நாட்டில் பலருண்டு
தேனுண்ட வண்டாய் களிப்புற்ற
உள்ளங்கள்
தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட  
இறைவனிடம் மண்டியிட்டார்
தொல்காப்பிய விருதும் தந்து
உங்கள் மனம் குளிரவைத்தார்.............!

உந்தன்
கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு
நாங்கள் தளமிழந்தோம்
சந்தேகம்
கேட்க இனி யாரிடம் செல்வோம்?

கவிக்கோமானே
எங்களை விட்டு வெகு தூரம்
சென்றதன் நீதி என்ன?
மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?

கவித்தொண்டு
உந்தன் உயிர் தொண்டு
உங்கள் குரல்
தமிழுலகம் தடம் புரளாமல்
செல்லும் வழி சொன்னீர்
நாளெல்லாம்
உனக்குத் தமிழ்ப்பணிதான்
இலக்கணம் போதித்த ஆசான்
தமிழர் மனம் இனிக்க
எறும்பாய் உழைப்பைத் தந்தாய்
தமிழுக்குத் தொண்டு செய்தோன்
இறப்பதில்லை
நிறைவான தொண்டால்
நிலைத்து நிற்பீர்
வாயார வாழ்த்துகிறோம்
உம் மனம் சாந்திக்கு
கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...