முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏங்கும் சுதந்திரம்


கவிதை:     ஏங்கும் சுதந்திரம்     
 வே.ம.அருச்சுணன் – கிள்ளான்

ஐம்பத்தேழு ஆண்டுகள்
மறைந்த மாயம் தெரியவில்லை
மூன்று இனங்களின்
தொலை நோக்கு நிரந்திரமாய்
அன்னியரின் தொல்லைகள் மாய்தன………..!

ஆகஸ்டு 1957 31
கதிரவன் கண் விழிக்க
அரங்கத்தில் மக்கள்
கடலாய்  நிறைந்திருக்க
பெருமிதம் நெஞ்சில் சுமந்திருக்க  
சுதந்திரத்தந்தை துங்கு
மெர்டேக்கா……..மெர்டேக்கா
ஏழுமுறை சீரிய சிங்கமாய்
உணர்ச்சியின் உச்சத்தில்
சங்கநாதமாய் முழங்கிட
மக்கள் இடியாய்த் தொடர்ந்தனர்.......!

அன்றுதான்
மக்கள் முதல் முறையாக
சுதந்திரக்காற்றை ஆழமாய்ச்
சுவாசிக்கத் தொடங்கினர்………!

இனி ஏழேழு தலைமுறையும்
பிழைத்துக் கொள்ளும்
நம்பிக்கை…..நம்பிக்கை
மக்கள் முகங்கள் பூத்த
மலர்களாய் மணம் வீசின
தெருவெல்லாம் வண்ண மயிலாய் நர்த்தனம்…………!

அடிமை வாழ்வு துறந்துவிட்டோம்
மூவினமும் சமநிகராய் உய்வதற்கு
மண்ணின் மைந்தன் பிறப்புரிமை
போதுமென்றே இறுமார்ந்தே
57 ஆண்டுகள்
கண்மூடி ஒட்டளித்தே
மண்டூகமாய் வாழ்ந்துவிட்டோம்……!

2020 நோக்கி
நாடு வெற்றிப் பயணம்
வானலாவிய கட்டிடங்கள்
ஒருசாராரின் வெற்றிச் சின்னங்கள்
துரோக அரசியலின்
எச்சங்கள்…………..!

சிரித்தே கழுத்தறுத்த
மகா திருடர்கள் நீண்டு வாழ்கின்றார்
அரசியல் பிழை செய்தோருக்குக்
அறமே கூற்றாகும் 
வரலாற்றையே கேலி செய்யும்
இட்லர்களின் தண்டோரா வளர்பிறை
வாசம் தாங்க முடியவில்லை…….!

இருண்ட உலகில்
சந்ததிகளின் வாழ்வு
நமக்கு சுதந்திரம் எப்போது?
மொழி,இனம் மறக்கும் நமக்கு
சுதந்திரம் எப்போது?
பிரிந்து வாழும் நம்மினம்
சுதந்திரம் எப்போது?





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...