முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ

கவிதைஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ 21.8.14
                வே.ம.அருச்சுணன் - மலேசியா

ஆளாய்ச் சென்று மக்கள்
ஆவியாய் பிறந்த மண்
திரும்புவது என்ன கொடுமை?
உலகில்  
இப்படியும் நடப்பது மனம் ஏற்குமா?

பச்சைப் பாலகன் முதலாய்
இளையோர் முதியோர்  
வாழ்வில் வசந்தம்
இனிய கீதம் இசைக்க
வானில் பயணிக்கும் வேளை
பாவிகளின் அடாவடியால்
நொடியில் தூளாகிப்போனது
இறைவா உன்னதாட்சியில் நீதி
கள்ளத் தோணியில்ஏறிக்கொண்டதே!


இறந்த பின்னும்
பிறந்த மண் தேடியவரும்
எங்கள் அன்புச்செல்வங்களே
நாட்டு மக்கள்
இனம்,மதம்,மொழி
கடந்து வரவேற்க
நீங்கள் சென்ற நுழைவாயில்
ஆராத்துயரடன் அகன்ற விழிகளோடு
மடைதிறந்த வெள்ளம் கண்களில்
கொப்பளிக்க வரவேற்கிறோம்………..!

நீங்கள்
நாட்டின் தேசிய வீரர்கள்
இன்னுயிரைத் தந்து நாட்டுப்புகழை
உயரத்தில் உயர்த்திப் பிடித்தவர்கள்……!

நாடே
உங்களுக்காக ஒரு நிமிடம்
மௌனம் கொள்கிறது
புனிதமான உங்கள் ஆத்மா
சொர்கத்தில் நிச்சயம்………..!

அறியாமல்
தவறுகள் செய்திருந்தால்
பெருமனதுடன் எங்களை மன்னிப்பீர்

நாடு
மீண்டும் அமைதி பெற
மக்கள் பிரிவின்றி வாழ
ஒன்றுமையாய் வணங்குகிறோம்
ஆசிர்வதிப்பாயாக………….!
   

                      ---------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...