முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பறவைகள்


                                              பறவைகள்                     
                                  வே.ம.அருச்சுணன் 


பறவைகள்
வானத்தில் பறவைகள்
வண்ணங்களில் பறக்கின்றன
துன்பமறியா உயிரினங்கள்
தூரமாய்ச் சுற்றுகின்றன
துயரமின்றி வாழ்கின்றன
காலம் வருகையில்
கவலையின்றி மறைகின்றன....!

மனிதன்
தாயின் வயிற்றில்
தவல்கிறான் பத்து மாதம்
பிரசவம் தாய்க்கு மறுபிறப்பு
பிறந்ததுமே அழுகுரல்
அமுதூட்டும் முதல் சங்கீதம்
அம்மா கேட்டு மகிழ்கிறாள்....!


பிள்ளை வளர்கிறான்
பிரச்னைகள் தொடர்கின்றன
வாழ்க்கையின்  ஒவ்வோர்
வளர்ச்சியிலும் சவால்கள்
நடக்க எத்தனிக்கும் போது
நளினமாய்ச்  சருக்கலும் தொடர்கிறது...!
கற்றவர் உலகை ஆள்வார்  
கல்லாதார் ஒடுங்கிப்போவார்
கடுந்தவம் கல்வி கைவசமாகிறது
பெற்றோரின் வாழ்வு
பெருமையுடன் மறுபதிப்பாய்
நாளும் நடைபயில்கிறது
நக்கலும் கிண்டலுமாய்ச் சிலகாலம்....!

பறவையாய் வானில்
பறக்க நினைக்கிறான்
அக்கினிக் குண்டங்களால்
ஆடியே போகிறான்
ஆறறிவு ஆஸ்தமனத்தால்
அகிலம் பொல்லாத்தாகிறது
பாதாளம் நோக்கிப்
பாய்ந்து செல்கிறான்....!  
                
                              *****************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...