முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூங்காற்றாய் வந்திடுமே


                             பூங்காற்றாய் வந்திடுமே              
(அறுசீர் விருத்தம்)          வே.ம.அருச்சுணன் 


பல்லினம்          கொண்டிந்த      நாட்டில
      நற்சுவை    உணவுக்கு         பஞ்சமில
எல்லையிலா     மகிழ்ச்சியும்       மறையில
     ஏற்றமும்      நாளுமே           குறையல
எல்லோரும்       விரும்பிடும்       வகையில
      எளிதாய்     மலிவான         விலையில
நில்லாமல்         உண்பதும்        துறக்கல
       நீடிக்கும்     போக்கும்         விலங்கல.....!     

நல்லுணவு        நாசிலெமா       கண்டாலே
      நாக்கில்     எச்சில்             ஊறிடுமே
கல்லாரும்        கற்றோரும்       அதனை
       காலம்      கரையுமுன்        உண்பார்
எல்லார்           மகிழ்வும்           மிஞ்சிடுவார்
       ஏற்றமிகு   விலையிலும்      உருசிப்பார்
நில்லாது         அறுசுவை         வேண்டுவார்  
      நீடிக்கும்     சுவைக்கே        ஏங்கிடுவார்....!

செந்தீயாய்        நெத்திலிச்       சம்பலும்
      சேர்ந்தே     கணவாய்க்       குழம்பும்
செந்நிறத்து      பொரித்தக்        கோழியும்
வெந்திட்ட                கோழிமுட்டை     அவியலும்
   வேண்டியளவு        தேங்காய்ச்          சோற்றுடன்
குந்தகமின்றி            தே தாரே          உறிஞ்சலுடன்
         கூச்சலின்றி      வயிற்றுக்குள்      தள்ளுகிறார்.....!

இரும்பாய்ப்              பன்னெடுங்          காலமும்
         ஈர்ப்பாய்         உண்ணும்            வேளையிலே
பெருமளவில்           உடலிலே             உபாதைகள்
         போராய்த்      தொடங்கும்           கணத்திலே
கருத்திழந்து         கண்டபடி                உண்பதாலே
          காசைக்      கொடுத்தே            துயர்பெற்றே
வருந்துதல்           ஏற்புடையச்             செயலாமோ
      வாழ்வதற்கு    மட்டுமுண்               நலம்காண்பார்.....!  

கொடியநோய்        தரும்வயிறே           மூலமே
        கேடுவரும்     உணவுகள்             தள்ளுவோமே  
நெடியவாழ்வு         பூங்காற்றாய்           வந்திடுமே
         நோயற்ற      வாழ்வுமே              கூடிடுமே
மடியாத                 உடல்நலம்            வந்திடுமே         
       மாண்டிடும்      காலம்நிதம்           நீண்டிடுமே
குடியுயர்ந்திட          கோடிநன்மை        செய்வோமே   
         கூடிமகிழ      காலனும்              வாழ்த்திடுமே.....!
          


குப்பைகள்               போடுமிடமாய்       வயிற்றினை       
     கூடியமட்டும்        செய்யாமல்           மனிதனாய்த்       
தப்புகள்                  இனியும்                கொள்ளாமல்
        தாயுள்ளம்       கொண்டவுயர்        மனத்தாலே
ஒப்பிலா                  செயலாலே           பேரின்பம்
        ஓயாமல்         முயற்சிகள்             செய்வீரே
தொப்பை                வயிற்றைத்            துறப்பில்புதுத்
       தோற்றம்         பெற்றேநீ               மகிழ்வீரே......!

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...