முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வன்மங்கள் மறுத்திடுவீர்


                            வன்மங்கள் மறுத்திடுவீர்    
                           
                                   வே.ம.அருச்சுணன் 

மக்கள் தொண்டை மகேசன் தொண்டறிக
     மாசற்ற அரசியல் கொள்வீர்   
நக்கல் குணத்தால்  நாளை ஓட்டுதல் 
     நாளும்   நாடும்  கெடுவீர்.....! 

வழிகள்  பலவுண்டு  உண்மை அறிந்திடுக
     வாழும்  போதே  செய்வீர்
அழியும் எண்ணங்கள்  தொலைத்திடு
      ஆறலும் அறிவும்  தந்திடுவீர்.......!

துணிவும் உண்மையும் மனதில் நிறுத்துக 
      தூய்மையும் துடிப்பும் அடைவீர்
பணிவும்  பாசமும்  அணைத்தே செல்கவே
      பாவமும்   துன்பமும்  கானல்நீர்.......!

பகட்டால்  வாழ்வில்  கேடுகள்  குறைத்திடுக
      பண்பாளர்   நெறிதனில்   செல்வீர்
சுகதுக்கம் வருவதே  இயற்கையே  புரிந்திடுக     
        சூதாட்டம் களைந்தே  வாழ்வீர்......!

வன்மங்கள்  கூடிட்ட இந்நாளை உணர்ந்திடுக
        வாழ்வினை பொன்னாய் ஏற்றிடுவீர்........!         

      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...