முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மாலை நேரம்




கவிதை:                       ஒரு மாலை நேரம்               
                                                 வே.ம.அருச்சுணன் 

சம்பளம்  கிடைத்திட்ட  மாலைவேளை
        சாந்திக்காக  நண்பர்கள் கூடுகின்றார்   
தெம்புடனே  கடைதனில்  அமருகின்றார்
         தேனாய்க்  கொஞ்சிடும் பேரழகிகள்
வம்பில்லா  தேன்சுவை பேச்சாலே
          வாஞ்சையுடன்  வருகின்றார்  புட்டியோடு
தம்கட்டியே   குடிக்கின்றார் வயிறுபருத்திட                                        
           தாளங்கள்  தாறுமாறாய்ப்   போடுகின்றார்.....! 
         
பொதுமிடமென் றும்பாராமல்  பேயாட்டம்
        போடுகிறார் இனமானம் விற்கின்றார்
மதுவினால்  தம்முயிருக்கும்  விலைகூறுகிறார்                                              
         மாமனிதரையும்  வம்புக்கே  இழுக்கின்றார்
எதுசொலியும்  அனைவரையும்  அநீதிசெய்கிறார்
         ஏனென்று  கேட்போரை வசைபாடுகிறார்
இதுவெலாம்  போதையில்  செயல்படுத்தும்
          ஈனப்பிறவிகள்  பூமிக்கிழைக்கும்  துரோகமன்றோ.....




குடித்தழியும்  பாவச்செயலை   விட்டொழிக்கும்
          கூடிவாழும்  குடும்பத்தலைவனை வணங்குவோம்
 நெடியவாழ்வில்   கோவில்கலசமாய்  விளங்கிடும்
              நேர்மையுள்ள   மனிதர்களை    வாழ்த்துவோம்
 இடியாய்த்   துன்பங்கள்   சூழ்ந்தாலும்
            ஈடற்றவாழ்வை   குறைவின்றி  நடத்திடுவோர்
 முடிமன்னர்  பேற்றினைப்   பெற்றவரே  
             மூடர்களின்  செயல்தனைத்  வேரறுப்பவரே.....!

நல்லநட்பால்    உயர்ந்தோர்   நிலைக்கின்றார்    
             நாளுமே  குணக்குன்றாய்  வாழ்கின்றார்
பொல்லாதவர்   சகவாசத்தில்  அழிகின்றார்
             போக்கிரிகள்  உறவென்றால்   கெடுகின்றார்  
சொல்வேந்தர்   சொற்கேட்டால்   உயர்கின்றார்  
             சோதனைகள்  கடந்துமே  வெல்கின்றார்
சொல்வாக்கிலார்  ஆராதனையை      வெறுக்கின்றார் 
             சோதனையின்றி  வாழ்கையினை   நகர்த்துகின்றார்.....!   
            



             
              
        
              


                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...