முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனசெல்லாம் இனிக்குதே



கவிதை:           மனசெல்லாம் இனிக்குதே           
                   வே.ம.அருச்சுணன்                           


பொன்விளையும்   பூமியிலலே   காலூன்ற  வேண்டுமையா
         போகற்று   நிற்கையிலே  யாருவுன்ன   மதிப்பதில்ல
 மணிக்கணக்கில்  பேசிநீயும்  சாதிக்கவே  ஒன்னுமில்ல
          மானத்தோட  வாழவேயோசி   ஒன்றுபடவே வழியிருக்கு
சந்ததி நல்லா    வாழனுமுனா   சாதிகீதி   பேசித்திரியாதே
          சாபத்தால   காணாமலே   போயிடுவே  கவனமாயிரு
உருப்படும்வழி     கண்முன்னே   இருக்குதேநீ   வாழ்றதபாரு......!

அண்ணன்தம்பியா   மனம்திறந்து   அனைவரிடமும்   பழகிப்பாரு
         அப்பவரும்   பாசமும்நேசமும்  அன்பும்பண்பும்  ஒட்டும் உறவும்
ஒன்றுபட்டால்   உண்டுவாழ்வுனு   தோட்டத்துலே  கத்துகிட்டோமே
           ஓட்டலயத்துல  வாழ்ந்தயெல்லாம்  
மறந்தெமொக்கை  ஆயிட்டியா


பழசமறந்தா     மனுசனாவாழ    முடியாதுன்னு   தெரியலையா?
           பாவத்தநீ  இன்னுமா சுமக்கனுமுனு  நினைக்கிறியே
முறையாகுமா?   வாழ்க்கைய  மாற்றிக்காட்டு   சரியாயிடுவே
          மூவினமும்   முன்னாடியே போயிடுவஏன்னா     நீஅறிவாளி....!
சோழமன்னர்    கொடிபறந்த  மண்ணிலேநீயும்     வீரமுடன்வாழனும்
         சோற்றுக்காகக்  கையேந்தும்  அன்னக்காவடி  வேடத்தாலே
மடியும்நாளை   எண்ணாதேநீ  கோபுரகலசமாய்   நிமிர்ந்து நிற்கும்
          மானமிகும்  பொன்னாளைக்  களிப்புடனே    வரவேற்கவே
விவேகமுடன்  கூடிடுவீர் வாழும்வழி   தேடுடிவீர்
          வீரமுரசுடன்   நல்வாழ்த்து  கூறிடுவீர்  அனைவருமிங்கே
மகிழ்வுடனே  வாழ்வுதனை  வாழ்ந்திடும்  நற்காலமும்
          மாண்புடனே  பிறந்ததென்றே  எழிச்சியுடனே  கொட்டுமுரசே.....! 


    
                   

     
                         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...