முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு...


     ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு                                       
                   வே.ம.அருச்சுணன் 

அகிலமும்  யோசித்தே – நீ
               ஆனந்தம்  அடைந்திடு
மகிவுடனே  வாழலாம்   _ நீ
             மாண்பையும்   பெற்றிடு....!

அன்புடன் பழகியே   _  நீ
                ஆலமரமாய்  நிமிர்ந்திடு
உன்னிடம்  நீதியிருப்பின்  _ நீ                                                     
                 ஊக்கமுடன்  திகழ்ந்திடு....!

எல்லாரும்   நல்லவராய் _ நீ
                ஏற்றாலே  பூரித்திடு
நல்லாரின்  அணைப்பாலே  _நீ
                நாளுமே    சாதித்திடு....!

கெடுவான்  கெடுமதியால் _ நீ
                கேட்டதைக்  கொடுத்திடு
நெடுங்காலம்   கூடிமகிழலாம்  _ நீ
                நேர்மையால் உயர்ந்திடு.....!


விட்டுக்கொடு   பகைமறையும்  _ நீ
            வீம்பைமற  வாழ்வுமலர்ந்திடு
தட்டிக்கொடு  உறவாலே _ நீ
            தாயன்பில்   எழுந்திடு.....! 

கனிவானே   நேசத்தால் _   நீ
            காவல்தெய்  வமாகிவிடு
தனியனாய்   மேம்பட்டு _  நீ
            தாளர்வின்றி   வளர்ந்திடு....!

உறவிலே   விரிசலின்றி _  நீ
            ஊருடனே   சேர்ந்திடு
மறவாதாச்  சொந்தத்தால் _  நீ
            மாமனிதராய்   ஒளிவீசிடு.....!

வெற்றுமனித  னாய்த்திரியாமல் _ நீ
            வேற்றுமை  களைந்திடு
வெற்றியானாய்  நலம்போற்றி  _நீ                   
            வேங்கையாய் முழங்கிடு.....!
     
மெய்யாய்   உழைத்திடு  _   நீ
    மேலோரை  வணங்கிடு
ஜெய்க்கனும்  உறுதியாய் ஐயாவு    _  நீ
    ஜெயமுடன்  வாழ்ந்திடு ஐயாவு....!
  


         
               

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 
                                                        
 

       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...