முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்


    உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்     
            வே.ம.அருச்சுணன்                            
                 
கவலைப்படாதே        சகோதராநீ            மகிழ்வுடன்வாழனும்
      காதுமட்டும்         நாலா பக்கம்          நொடியும்திருப்பனும்
தவத்தின் துணை       பெருவாழ்வில்        புகழால் உயரனும்
      தாய்மைக்கு         வணக்கம்கூறி         உயர்வால் நிமிரனும்!

பொல்லாதவர்          சூழ்திருக்கும்            இவ்வுலகினிலே
      போக்கிரிகள்      கழுகுகளாய்ச்           சுற்றும்நாளிலே
சொல்லாமல்            உமைக்கொல்லும்     துயரங்களிலே
      சோராதிருந்தே   வெல்கபுத்திக்           கூர்மைதனிலே!      
  
நல்லாரிங்கே              அழித்தவரே            சுயநலமிகளே
        நாளும்பெருகி     அமைதியழிக்கும்       வஞ்சகர்களே
கொல்லும் திறன்         கொண்டகொடுங்      கோலர்களே
         கோடிவரினும்     தீயோர்உறவைத்       தள்ளுங்களே!

மிஞ்சும்காலம்              நலம்பயக்கவே          நயந்தேவாழ்வீரே
         மீண்டுமொரு      வாழ்வுமில்லை          எண்ணி உணர்வீரே
நெஞ்சத்தின்               நேர்போக்கிலே          உய்வதை ஏற்பீரே
         வீசும்தென்ற      லாய்வாழ்வை            சுவைத்தே மகிழ்வீரே!

   தெய்வங்களின்             கருணையாலே             ஏழையும் வெல்வார்
         தேசம் காப்போர்     வானுயர்ந்தே               சிறக்கவே எழுவார்
   மெய்யாய் வாழ்              வோரிங்கே                  அகிலமும் கொள்வார்
         மேதினிலென்றும்     உயர்மனத்தார்             ஏற்றிப் போற்றுவார்!   
       
   விண்ணவர்போற்ற         உத்தமர் சொல்லை      அறிவில் ஏற்றே
          வீரம்பொதிந்தே      வாழ்தலை அறவோர்   ஏற்பார் நன்றே
   எண்ணம் பதித்தே         அனைவருமிங்கே          உச்சம் முயன்றே
           ஏற்றமுடனே          பதினாறுசெல்வம்         அடைவாய் நன்றே!  

      
  



               





              



              
       
          

                                                                                    










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...