முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றிக் காட்டுவோம்


கவிதை:        மாற்றிக் காட்டுவோம்                 18.6.2013
                        வே.ம.அருச்சுணன் 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
நன்றே பயன் படுகிறது......!

நூற்றாண்டுகள்  எப்படியோ
வாழ்ந்து விட்டோம் இனி யாரும்  
சிவப்புக் கம்பளம் விரித்து
வண்ண மலர்கள் தூவி
மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
வரவேற்கப் போவதில்லை......!

நாட்டின் நடப்புகள் நாளும்
நடுக்கத்தைத் தருகின்றன
கனவுகள் நிறைவேறும் சூழல்
மங்களாகத் தெரிகிறது நாட்டின்
சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
வாழ்க்கைப் போராட்டம்
தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது.........!

கவன ஈர்புத் தீர்மானத்தை
சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
கரணம் தப்பினால் மரணம்
பிளவுகளை வீசுவிட்டு
தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
துணிவாய்த் துறந்து
அடிமை விலங்கை உடைத்து
அறியாமையைத் துடைத்து
தலைநிமிர்ந்து
போராட்டத்தைத் தொடங்குவோம்.........!

மொழியைக் காப்பதற்குத்
தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்பால்
அருந்த வழிகாண்போம்
கலாச்சாரம் அழிவதற்கு சூது
செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்......!

ஆணவத்தால் அடக்கிவைக்கும்
அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
நேற்று முளைத்த காளான்கள்
நம்மை மிரட்டுவதோ?
கிழடுகள் சில வரிந்து நின்றே
சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
கச்சிதமாய்  முறியடிப்பீர்........!

நம்மைக் கிள்ளுக்கீரையாய்
எண்ணித்திரிவோர் கொட்டம்
அடங்கும் காலம் தொலைவில் இல்லை
நன்றியைக் கொன்று
சதா வம்புக்கு நிற்கும்
ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
முந்திரிக் கொட்டைகள்
முகத்தில் கரியைப்பூசுவோம்
உலகத்தார் காறி துப்பட்டும்.........!

அறிஞர்கள், கல்விமான்கள்
தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
கலைஞர்கள்,தொண்டர்கள்,
தியாகிகள்,அரசியல்வாதிகள்
வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
இனமானம் காக்க இன்றே
ஒன்றாய்  எழுவோம்
நாட்டின் தலையெழுத்தை

மாற்றிக் காட்டுவோம் வாரீர்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...