முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரைக்குடிக்கும் போலிகள்

கவிதை:        உயிரைக் குடிக்கும் போலிகள்            8.6.2013
                 வே.ம.அருச்சுணன் – மலேசியா 

மக்களின் தோழன் காவல்துறை
நேர்த்தியாய் இருந்தது
தொல்லையென்றால்
ஓடோடி வந்து பணி செய்த காலம்
மலையேறிய விட்டதோ
அச்சநிலையில் இன்று மக்கள்
வாழ்கின்றனர்...........!

போலிஸ்சாரா? போலி சாரா?
மக்கள் தோழனா,மக்களின் எதிரியா?
காவல்துறை முகங்களில் இறுக்கம்
மக்களின் மனங்களில் நடுக்கம்..........!

2000 தொடங்கி இன்றுவரை
தடுப்புக்காவலில் 219 மரணங்கள்
பதினொரு நாளில்
நமது ரத்தத்தின்
மூன்று மரண ஓலங்கள்
மக்கள் தினம் செத்துப் பிழைக்கும்
துயரங்கள் தொடர்கதையோ..........?

வேலியே பயிரை மேய்வதேன்?
கள்ளத்தோணியில் இங்கு
வந்தாருக்கும் இல்லை கொடுமைகள்
நமக்கு மட்டும் வரிந்து கட்டி அநீதியேன்.........?

வேண்டாம் அநீதிகள்
சட்டம் எல்லாருக்கும் சமம்
சதிகள் அழியட்டும்
நீதி நிலைபெறட்டும்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
வாழ்வில் வசந்தம் மலரட்டும்..............!

இளையோர்
பண்பாய் வளரட்டும்
தலைவர்கள் முன்மாதிரியாகட்டும்
உலகெங்கும்
நாட்டுப்புகழ் ஓங்கட்டும்
ஒளிமயமான வாழ்வு அமையட்டும்
ஓரினமாய்
நமது மக்கள் வாழ்வதற்கு
பெருந்தலைவர்கள் மனத்தில்  
இசைவாய் செயல்கள் அமையட்டும்......!

குத்திவிட்டு
வேடிக்கை பார்க்கும்
கொடிய குணங்களை
வேரோடு அறுத்திடுக
நாட்டு அமைதிக்கு அநீதி செய்யும்
தலைவர்களை
நாட்டு நலம் கருதி
தடுப்புக்காவலில் வைத்திடுவோம்......! 

சிறையில் சிதைந்து போன
நம்செல்வங்களின் அனுபவங்கள்
ஆணவத் தலைவர்கள்

தவறாமல் அனுபவிக்கட்டும்...........!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...