முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:            பணமூட்டை புகை மூட்டமானது       
                         வே.ம.அருச்சுணன் – மலேசியா
 
சோற்றில் மண்ணைப் போடுதல்
தர்மமாகுமா?
காற்றில் விசத்தைக் கலத்தல்
நீதியாகுமா?
தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்
நல்லதாகுமா?
மக்கள் தினம் அவதிபடுதல்
மனிதநேயமா?
நோய்கள் தாக்க வழிசெய்தல்
இதயம் தாங்குமா?
 
உலகெங்கும் உன் சொத்து
மதிப்பே பல கோடி
நாளெல்லாம் அதன் பேச்சு
நிம்மதியோ ஓடிப்போச்சு!
 
ஏழை சிறுகுப்பை எரித்தல்
பெரும் குற்றம் நொடியில்
நீதிதேவன் வாசலில் நிற்பான்
கனமுள்ளவன் காட்டை எரிப்பான்
காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்
தீ அணைப்பதற்கும் வானில்
பணமழை பெய்யும் நீதிகேட்டால்
முக்கியப் புள்ளிகளாம்
மௌனமே பதிலாகும் என்றும்
ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!
 
மக்கள்  அரசு நீதி காக்கும்
பேதமின்றி கண்ணீர் துடைக்கும்
பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்
புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்
காற்றாய்ப் பறந்து போகும்!
 
இயற்கைதனை அழிப்போர்
இறைவனின் எதிரியென்போம்
படைத்தவன் நமக்களித்த
வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்
அரக்கனை அழிப்போம்
பணத்துக்குச் சோரம் போகும்
கொடியோரின் கருவறுப்போம்
தலைமுறையும் துளிர்க்காமல்
காவல் காப்போம்!
செயற்கைப் பேரிடர்
நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
அற்ப ஆயுளை முத்தமிடல்  
கொடுமையின் உச்சம்!  
 
இறைவனின் அருட்கொடை
மனிதன் இயற்கையை
நேசிப்பதும் சுவாசிப்பதும்
காப்பதும் வாழ்த்துவதும்
உரிமையும் பெற்றவன்!
 
இயற்கையைக் காக்க
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளித்தருவோம் மடமையில்
எதிர்போரைக் கிள்ளி எறிவோம்
அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
விட்டுவைப்போம் செழிப்பாய்
அதுவரையில் உயிராய்க்
காத்து நிற்போம்!
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...