முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலேசியாவில் ‘மௌனம்’ சிற்றிதழ்

கட்டுரை:       மலேசியாவில் மௌனம் சிற்றிதழ்         28.5.2013
                 வே.ம.அருச்சுணன் – மலேசியா
மலேசியாவில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வெளிவரும் தற்காலக் கவிதை சிற்றிதழாகும்.மலேசிய நாட்டின் முன்னணிக் கவிஞர் ஜாசின் ஏ.தேவராசன் அவர்கள் பொறுப்பில் இந்த இதழ் வெளிவருகிறது.
      நினைத்த நேரம் வெளிவரும் இதழ் என்று குறிப்புடன் இலவசமாக வெளியிடப்படும் இவ்விதழில் மலேசிய நவீன கவிதை முன்னணி எழுத்தாளர்கள் பலர் எழுதுவது வழக்கமாகும்.
  மா.சண்முகசிவா,சீ.முத்துசாமி,கோ.புண்ணியவான்,சை.பீர்முகமது,பா.அ.சிவம்,கே.பாலமுருகன்,ந.பச்சைபாலன்,சீ.அருண்,மஹாத்மன் போன்றோரின் எழுத்துகள்  இதழினை வளம் சேர்க்கும் பட்டியலில் முதன்மையானவர்கள்.
       நல்ல பல கவிதைகள் இவ்விதழில் இடம் பெறச்செய்யும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.சிறந்த கவிஞர்களின் வட்டத்தை இந்த இதழ் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
       புதுக்கவிதைகள் மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றக் கட்டுரைகள்,விமர்சனம் பலவும் இந்த இதழில் அவ்வப்போது இடம் பெறும்.மலேசிய நவீன படைப்பிலக்கியத்திற்கு இந்த இதழின் பங்களிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
      தரமான படைப்புகள் மூலம் மலேசிய எழுத்தாளர்களின் திறனை இந்நூல் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துவரும் இச்சிற்றிலக்கிய இதழ் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன்.

      மின் அஞ்சல் வழி நவீனப் படைப்புகளை அனுப்பலாம்.

      ovilak@yahoo.com.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...