முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏமாளிகளா...கோமாளிகளா...?

ஏமாளிகளா...கோமாளிகளா....?       
                          வே.ம.அருச்சுணன் 

மொத்தமாய்
ஐந்து ஆண்டுகள்                     
முடிந்துவிட்ட நிலையில்
5.5.2013 இல்
மக்களின் மனங்களைச்
செவ்வனே சுத்திகரிக்க
மீண்டுமொருமுறை
நல்லாட்சிக்கு வரவுகூற
ஜனநாயக தீபமேற்ற
நடந்தது பதின்மூன்றாவது பொதுத்தேர்தல்.....!

தேர்தலுக்கு முன்னும் பின்னும்
வேட்பாளர்கள்,கட்சித்தொண்டர்கள்
வானவில்லையும் மிஞ்சும் மனிதர்கள்
விஸ்வரூமுடன் அரங்கேற்றிய
அடாவடிகள்
ஜீரணிக்கவும் முடியவில்லை
தடுக்கவும் வழியில்லை
தப்பாட்டம் வென்றது.......!

தேர்தலுக்கு மட்டுமே
முகம் காட்டும் நிபுணர்கள்
காட்டிய வித்தையில்
அதிசயங்கள் பல்கிப் போயின
அடுத்த தேர்தல் மட்டும் அவை
மனத்திரையில் ஓங்கி நிற்கும்
இரட்டைக் கோபுரங்கள்.....!

புதிய வார்ப்புகளாய்
வரலாறு காணா குளறுபடிகள்
மனங்கள் ஏற்க மறுக்கும் நடமுறைகள்
வெளிநாட்டார்
கண்டு களிப்புற்ற காட்சிகள்.....!

ஆள்வோர் வகுத்த வழி
கபட நாடகங்கள்
தலைப்பாகை கட்டிக் கொண்டன
தர்மம் குப்புறக்கவிழ்ந்து கொள்கிறது
கைகளைப் பிசைந்த நின்ற
மக்களின் முகங்களில்
கருமேகக்கூட்டங்கள்......!

ஆற்றிலொரு சேற்றிலொரு கால்கள்
இரண்டும் கெட்ட நிலை
தமிழர் வாழ்வு 
சோதனையின் உச்சமா?
வெற்றியன்னை முத்தமிட அச்சமா?
இனங்களின் துச்சமா?
நமக்கு வாழ்வே எச்சமா?

கையேந்தும்
நிலையில் வாழ்வதாலே
பகடக்காயாக மாற்றப்பட்டோம்  
மற்ற குடியினருக்கும்
நிகராக வைப்பதற்கு
ஆளும் வர்கத்தினருக்கு
குணமும் இல்லை வாழ்விக்க
மனமும் இல்லை.....!

வெற்றி முழக்கம்
தூக்கலாய்க்  ரீங்காரமிடுகிறது
அதிகார அதிர்வேட்டுகளும்
மூலைமுடுக்குகளில் ஓங்காரமிடுகிறது
வழக்கம் போல் தர்பார்........!  

வாக்கு மட்டும்
வக்கணையாய்ப் பெற்று
நடுவீதியிலே விட்டகதை
இன்னுமொரு
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குத்
தொடர வேண்டுமா....?

                                     முடிவு



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...