முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரதாயே வணங்குகிறோம்

(சுதந்திரதினச் சிறப்புக் கவிதை)
கவிதை:   சுதந்திரத்தாயே வணங்குகிறோம்     
                             வே.ம.அருச்சுணன்
31 ஆகஸ்டு 1957
இனிய வரவுக்காக
உன் திருமுகத்தைக்
கண்குளிரக் காண்பதற்கு
மூவின மக்களும் ஒன்றாய்க் கூடி
மெர்டேக்கா....மெர்டேக்கா என்றே
ஏழுமுறை நெஞ்சுக் குழியின் அடியிலிருந்து
உரக்கக் கூறி வரவு சொன்னோம்
எங்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில்
மடைதிறந்த வெள்ளமாகியது..........!

அன்றுதான்
மக்கள் ஆனந்த கூத்தாடினர்
குடிசைகளிலும் மாடமாளிகைகளிலும்
மத்தாப்புச் சுடரொளி  வியாபித்தது
மக்களிடையே பேதமில்லை
மாற்றுக்கருத்துக்கும்  இடமில்லை
சுதந்திரத்தைச் சுவாசிப்பதற்கும் தவறவில்லை
புவியில்  வாழுமட்டும் பெற்ற
சுதந்திரத்தை நாளும் காத்திட
வளமுடனே  வாழ்வதற்கு
வழிதனைக் காட்டிடுவாய்
எங்கள் அன்புத்தாயே.........!

ஐம்பத்தாறு ஆண்டுகள்
பல்வேறு  சோதனைகள்
அணிகளாய்ப் பெற்றோம்
குள்ளநரிக் கூட்டங்கள் சில்லறையாய்ச்
சித்து விளையாட்டுக்கள் புரிந்தன
நீ தந்த வாழ்வுக்குத் தீதாய்க்
குண்டு வைத்தே தகர்க்க எண்ணியோர்
கூட்டம் புறமுதுகுக் காட்டிக்
கண்ணினின்றும் பதர்களாய்ப் பறந்து செல்ல
ஒற்றுமையால் வெற்றி கொண்டோம்.........!

தேசியக் கொடியில் மிளிரும்
வண்ணம் போல் மன ஒருமையால்
உலக மக்கள் பலருடனே
எண்ணத்தால் கூடிவாழ்கிறோம்
நன்மைகள் நித்தம்  பெறுகிறோம்
அரசும் மக்களின் நாடிபிடித்தே
நல்லாட்சி தருவதால்  வாழ்கிறோம்............!

இனிய நாளிலே
இதயம் மகிழ்ந்திடும் வேளையிலே
சுதந்திரத்தாயிடம் பணிவாய் ஒரு விண்ணப்பம்
மாசிருந்தால் மன்னித்திடுத் தாயே
மனதில் ஏதும் கலங்கமில்லை........!

நாட்டுக்காகக் குனிந்தவன்
நாடு வளர்ந்துவிட்டது
அன்று குனிந்தவன் இன்னும்
நிமிராமல் இருக்கிறான்
இவனுக்கு விமோசனமே இல்லையா.........?

தமிழர் வாழ்வில்
நலங்கள் சேர்க்கக்  கடைக்கண்
பார்வைதனைத் தாருமம்மா
ஏழையாய் வாழும் வினைதனை
விரைவாய்ப் போக்கிட உன்னருள்
பெற்றிடவே வேண்டுகிறோம்.........!

புண்ணிய நாட்டில்  புத்தனாய் வாழ்வதற்கு
வழியமைத்தத் தாயே வாழ்கவே
நாங்கள்  பெற்ற சுதந்திரமே வாழியவே.........! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...