முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சுப் பொறுக்குவதில்லையே...

:      நெஞ்சுப் பொறுக்குதில்லையே                        
               வே.ம.அருச்சுணன்

இம்மண்ணில் பிறந்த
டெங்கில், பெர்மாதா குடியிருப்போர்
நூறு நாட்களாய் வீதியிலே
பணக்காரர் வீட்டு நாய்கள்
குளிர்சாதன அறையிலே.....!

நாட்டை வளமாக்கி
உருகுழைந்து  அப்பாவிகள் உறங்க
நிதம் தவிப்பது தலைவர்களுக்கு
கண்ணாமூச்சா?

எங்கோ பிறந்தவர்கள்
புத்திரா ஜெயா சொர்கபூமியில் உல்லாசம்
சகுனியின் வஞ்சனையால்
விரட்டப்பட்டோர் நடுவீதியில்
கண்காணாத நாட்டில்
குளிருக்குக் கம்பளி  
சொந்த நாட்டில் மக்கள் கொசுக்கடியில்...!
ஏனோ, தமிழனின் கதறுல்கள்
யாருக்கும் கேட்பதில்லை
மற்றவருக்கு வெண்ணெய்
நமக்குச்  சுண்ணாம்பு...!

மனித நேயத்தை மறந்தான்
இறைவனும் பெர்மாத்தா மக்களை மறந்தான்
மனிதன் வஞ்சித்தது போதென்று
துன்பங்களை மறந்து கண்ணயரும்
நடு இரவு என்றும் பாராமல்
இடியாய்,மின்னலாய்,புயலாய்,மழையாய்
அல்லாட வைத்து விட்டாயே?
 மனிதனால் பட்டது போதாதென்று
இறைவா நீயுமா எங்களைச் சோதிப்பது?
எங்கே போவோம்
இது நாங்கள் பிறந்த பூமி....!

நம்பிக்கையில் 
உயிரைப்  பிடித்துக் கொண்டு
தீபத்திருநாளை இல்லத்தில்
கொண்டா வேண்டுகிறோம்
மனம் குளிரும் செய்தி
விரைவில் வந்திட ஏங்குகிறோம்
நடுவீதியில் நிர்கதியில்
உன்பார்வை எங்கள் மீது
வரைந்து விழுவட்டும்
பிள்ளைக் குட்டிகளின் கண்ணீர்
நொடியில் மறையட்டும்
கணக்கின்றி நாட்டைச் சுற்றிவரும்
தெய்வங்கங்களே உன் பத்தர்கள்
நெடிய நலம் பெற
ஆசி வழங்கிட வந்திடுவீர்.....!
 
              முற்றும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...