முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்

:    நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்  
                      வே.ம.அருச்சுணன்

வாழ்வும்  வளமும்  தந்தவளே
நலம்  காத்த  மகிழ்ந்தவளே
என்னைப்  பெற்றவளே  உன்னை
வணங்குவதில் தயக்கமில்லை
பூச்சூடத்  தவறியதுமில்லை
தீபத்திருநாளில் ஒளியேற்ற மறந்ததில்லை.....!

நூற்றாண்டுகள் பல கடந்தும்
தமிழர் வாழ்வில் வசந்தம்
எட்டாகக் கனியாகிப் போனதேனோ?
முதுகொடிய உழைத்தவன் வாழ்வு  
கானல் நீர்தானா?

நேற்று கால் பதித்தோர்
குறிஞ்சி நில மன்னர்களாய்ப் பயணிக்க
பாலை நிலத்து அகதிகளாய்  நாம்
அவதிகளின் உச்சியில் புதையுண்டு
நாளும் மூச்சுவிட தினறுவதேன்?

நல்வழிகாட்ட  நாட்டிலே
ஆள்வோர்  முனைவதில்லை
பிறந்த பூமியிலே
தென்றலைக் கட்டிக் கொள்ள
அடுக்கடுக்கான தடைகள்
பேரலையாய்ச் சீறுவதேன்?

நன்னாளில்
என் குறையைக் கொட்டிவிட்டேன்
காயமுற்ற மனதுக்கு மருந்திட
குட்டித்தீவில் தனியனாய்ப் புலம்புகின்றேன்
நம் வாழ்வும்  சிறக்குமென்றே
இரண்டு கோடி மக்களில் ஒருவனாய்
நம்பிக்கை ஒளியுடன் உன்னை
அன்னாந்து பார்க்கிறேன்
தன்மானச் சிங்கமாய்
ஒளிபடைத்த கண்களாய்
தீப ஒளி ஏற்றுகிறேன்....!

வணங்கிடும் இனமாக இங்கே
வழிகாண இறைஞ்சுகிறேன்
நீதிகள் நிலை பெறவே
அநீதிகள் அடியோடு மறையவே
தமிழர்கள் அனைவரும்
ஒற்றுமை ஒளியை ஏற்றிவைப்போம்
தமிழரினம் ஒன்றென்று
புரிய வைப்போம் தவறாமல்
தீபத்திருநாளைக்  கொண்டாடி
மகிழ்ந்திடுவோம்…….!



                                  முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...