முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் இந்த தலையெழுத்து

:            ஏன் இந்த தலையெழுத்து           
                           வே.ம.அருச்சுணன் 
ஆதியிலே
இருநூறு ஆண்டுகளின் வீதியிலே
இந்நாடு வெறும் காடுகளாக இருக்கையிலே
வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சியிலே
மலைநாடாக இருந்த வேளையிலே
வயிற்றுப்பசிக்காக வந்த ஏழைகளிலே
ஆண் என்றும் பெண் என்றும் நிற்கையிலே
பாகுபாடு ஏதும் காட்டாத வகையிலே
வேலை வாங்கினான் அடிமை நிலையிலே
கொசுக்கடிக்கும் விஷப்பாம்புக் கடிக்கையிலே
உயிரிழந்தோர் எண்ணிக்கைக் கூடுகையிலே
விலங்குக்கு இரையான கணக்குக் கண்பிதுங்கயிலே……..!

நல்லுணவின்றி பல்வேறு நோய் கண்டார்
அநியாய சாவுகளை மலையாய்க் கொண்டார்
நாதியற்ற அநாதிகளாய் புதையுண்டார்
நாட்டே முதன்மை என்றார்
உயர்வுக்கு ஏணியாய் நின்றார்.........!

நிலத்தில் ஓடியது வியர்வை ஆறு நன்று
நொய்யத்தில் வடிந்தது பால் அன்று
இந்தியரின் குருதி என்றால் பிழையன்று
நாட்டின் வளம் உயர்ந்ததன்று............!

காட்டையழித்துச் சாலை அமைத்தான்
கருஞ்சாலைகளால் இனத்தைக்காட்டினான்
குன்றின்மீது மின்சாரக் கம்பம் நாட்டினான்
வாழ்வில் மட்டும் மடுவில் நின்றான்
குடிநீர் குளம்கட்ட உயிரைப் பணயம் வைத்தான்
தன்குடியுர மட்டும் கடுகளவும் எண்ண மறந்தான்
மரமாய் வாழ்ந்ததாலே மானமும் இழந்துவிட்டான்...........!

நாட்டுத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையில்
வீழ்த்தப்பட்டே நிர்கதியாய் துவண்டு நிற்கையிலே
தொலைநோக்கில்லா நம் மண்டைகளின் வீராப்பிலே
சொந்த இனத்தையே அடித்து உலையில் போடுகையிலே
நம்பிய மக்கள் நடுவீதியிலே யாசகம் செய்கையிலே
துரோகிகளை வீழ்த்திடவே தருணம் நெருங்கையிலே
கிழடுகளின் அட்டகாசம் அழித்திட அறவழியிலே
இளைய சிங்கங்கள் தெளிவுடன் நிற்கையிலே
தமிழன்  தன்மானமாய் வாழ்கையிலே
வாழ்வதற்குத் தீர்க்கமான வழியினிலே
ஒன்றாய் எழுவீர் இளஞ்சிங்கங்களே........!

ஆதியில் பாடுபட்ட தமிழன் அல்லலில்
உழைக்க மறுத்த இனம்
சோம்பி வாழ்ந்த மனம்
மகிழ்ச்சியின்  சொர்கவாசலில்
நம்மைக் கண்டு ஏளனம் எகத்தாளம்
இறக்கை கட்டிப்பறக்கிறது
அநீதிக்கு அரை நூற்றாண்டு
குடைபிடித்து நின்றது போதும்
இருளில் மொட்டை போட்டு
இளிச்சவாயர்களின் வரிசையில்
கொடிமரமாய் நின்றது போதும்
இனியாகிலும் நாட்டுக்குரியவனாய்
மிடுக்குடன் வாழ்ந்திட இன்றே
இளையோர் தன்னினம் எழுச்சி கொண்டு
துணிந்து எழுந்திடு உன் கடன் செய்திடுக
தலையெழுத்தை மாற்றிடுக........!
                               
                                முடிவு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...