முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்க நகர சிங்கமே

:            சிங்க நகரின் சிங்கமே              24.6.2013
                       வே.ம. அருச்சுணன் - மலேசியா
சிங்க நகரை
தங்க நகராக்கிய  சிங்கமே
உன் கர்ஜனைகள்
உருமாற்றத்தின் உச்சமாகின
கடுகுத்தீவை உலகம் மொய்க்க வைத்தாய்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதென்பார்
உனது தொலைநோக்கு
உலகக்கண்களை விழிபிதுங்க வைத்தாய்
உன்னை மட்டுமே பார்க்காமல்
உலகம் ஓங்கவைத்தாய்
இறை தேடும் பறவைகளை வாழவைத்தாய்........!

தூய்மையான நாடு, மாசற்ற ஆட்சி 
ஜனநாயகத்தின்  உலகக் கோப்பையை
நீ ஒருவனே தனித்து வென்றாய்.....!

உயர்வான கல்வி,மருத்துவம்
காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை
பறந்து செல்ல சாங்கி
சட்டம் போற்றும் மக்கள்
உனது வெற்றியின் விழுதுகள்......!

தொன்னூரைக் கடந்தாலும்
நாட்டு நலம் போற்றும்
கர்மவீரனே நீர் ஓர் அதிசயம்
நடை தளர்ந்தாலும் உன் கர்ஜனை தீவெங்கும் கேட்கும்.....!

வாழும்போதே நாட்டுக்கு நல்லதைச் செய்யும் மனதை
மக்கள் பெற்றனர்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை யதார்த்தத்தில் கண்டனர்
உழைப்பின் தத்துவத்தை அழுத்தமாய்க் கூறியவனே
கணம் உனை மறந்தால் தோல்வி என்றும் தப்பாது
வாழ்கவே பல்லாண்டு
சிங்க நகர் சிங்கமே............!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...