முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஆய்வியல் துறை காக்கப்பட வேண்டும்


கட்டுரை:    இந்திய ஆய்வியல் துறை காக்கப்பட வேண்டும்    1
                                    வே.ம.அருச்சுணன் 
புதிய வெளிச்சம் வழி தலைமையாசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் அவர்கள் இந்திய ஆய்வியல் துறையைக் காக்கும் பொருட்டு தமது சக்திக்கும் மீறிய நிலையில் பல ஆய்வுகளையும்,தற்கரீதியாகப் பல்வேறு கருத்துக்களையும் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில்  மிகவும் தெளிவாகவும் தைரியமாகவும் பல வாரங்களாகத் தொடராக எழுதிவந்தார்.
பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க, இந்திய சமுதாயம்,அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புகள்,அரசு சார இயக்கங்கள் களமிறங்கி  இன அழிவிற்கு வித்திடும் இந்தியல் ஆய்வியல் துறை இயற்கை மரணத்தை அடையும் துர்பாக்கிய நிலையைத் தடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்பிற்குச் சாதகமான நிலை ஏற்படாத நிலையில் வருத்தமுடன் தாம் இனியும் அப்பிரச்சனையைத் தொட்டு எழுதப் போவதில்லை எனும் ஆசிரியரின் நிலைப்பாடு வாசகர்களிடையே மிகுந்த வேதனையும் அதர்ச்சியையும் தந்துள்ளது!
மொழிப்போராட்டத்திற்காக, ஒரு வீரத்தமிழனின் கர்ஜனைகள் மிகவும் பாராட்டுக்குரியது. அவரின் வீரப்போராட்டம் வரலாற்று பதிவில் முத்திரைப் பதிக்கத்தக்கதாகும்.வால் முனையை விட பேனா முனை சிறந்தது என்பது வரலாற்று பதிவாகும்.அன்புள்ள ஆசிரியரே,தங்களின் சமுதாயப் பணி அளவிடற்கரியது.சமுதாயம் ஓரளவு விழிப்புற்றதில் தங்களின் பங்களிப்பு அளப்பரியது.தொடர வேண்டும் தங்களின் அறப்பணி. வாசகர்கள் என்றும் தங்கள் பக்கம்!   
இந்நாட்டுத் தமிழர்களின் தலைவிதியைத் நிர்ணயம் செய்யும் ம.இ.கா.1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அரசாங்கத்திலும்,அமைச்சரவையிலும் இன்று வரை பங்கு பெற்று வந்துள்ளது.
சகோதர இனமான சீனர்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது,பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.அதே சமயத்தில் இந்தியர்களின் ஒட்டு மொத்த வளர்சியை ஒப்பிடும் போது மிகவும் வருத்தப்படும்நிலையில் உள்ளது.சீனத்தலைவர்கள், இனத்தின் உயர்வுக்காகத் தொலைநோக்குடன் செயல் பட்டதால் இன்று பொருளாதாரப் பலம் பொருந்திய இனமாக உயர்வுடன் போற்றப்படுகிறது.சுயநலமிக்க இந்திய தலைவர்கள் சுயநலமாகச் செயல் பட்டதால் நமது உரிமைகள் பலவற்றைத் தொடர்ந்து தாரைவார்க்க வேண்டிய நிலைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது.
சமுதாயம் இழக்கக்கூடாத ஒன்றாகத் திகழும்,மலாயப் பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறை மிகவிரைவில் இயற்கை மரணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில், நம்பிக்கைத் தரும் நடவடிக்கையில் அமைச்சரவையில் வீற்றிருக்கும் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களும்,துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ.எஸ்.சுப்பிரமணியம்,துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன்,துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் மற்றும் ஹிண்ட்ராப் தலைவர் வி.வேதமூர்த்தி அவர்களும் இறங்காமல் இருப்பது அதர்ச்சியளிக்கிறது. பிரதமரின்தலையீடு மட்டுமே இப்பிரச்சனைக்குத் நிரந்திரத் தீர்வாக அமையும் என்பதை உணர்ந்து இவர்கள் உடனே செயல் படுவார்கள் என்று சமுதாயம் பெரிதும் நம்புகிறது.மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது நம்பிக்கை வை பிரதமர் நஷிப் அவர்களின் கடமையாகும்.

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் போல் இந்நாட்டுத் தமிழர்களும் மொழி இழந்து வாழும் நிலைக்கு இன்றையத் தலைவர்கள் கொண்டு செல்லமாட்டார்கள் என்று இந்திய சமுதாயம் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது! மொழி இனத்தின்உயிர்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்,எனும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்து மனதில் இருக்கட்டும்!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...