முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்த்தீங்களா நம்ம பிழைப்ப..


கவிதை:          பார்த்திங்களா நம்ம பிழைப்ப        
                    வே.ம.அருச்சுணன் 
சஞ்சியில வந்து
கஞ்சிக்காகப் போராடி
பந்தபாசம் துறந்து
சொந்த நலன் மறந்து
மண்ணுக்காக
உழைச்சவங்க.....!

நாட்டு விசுவாசம்
கடுகளவும் குறையாமல்
மக்களோடு கலந்து
இன்னுயிரைத் தந்து
உருவாக்கிய பூமி
இன்றும் நமக்கு
உயிர் போராட்டம்தான்....!

நம்மீது எவருக்கும்
இரக்கம் இல்லை
உதவுவோரும் இல்லை
இளையோரே
ஊருக்கு உழைத்தது போதும்
சமுதாயம் உயர
நீ என்ன செய்யலாம்
ஆழ்ந்து நோக்கு
வன்முறை வேண்டாம்
நெருப்பாய் உழை....!

முதற்பணி
கல்வியில் கரைசேர்
இரண்டாம் பணி
சுயதொழில்......!

பொருளியல் பலம்
பெருமை தரும்
சமூகம் ஒன்றாகும்
தாய்மொழி நிமிரும்
கலைகள் வளரும்
பண்பாடு ஓங்கும்
உன்னை
உலகம் விமர்சிக்கும்......!

அரசியல்
உன்னை ஆராதிக்கும்
நாட்டின் விதியை முடிவு செய்
எல்லா தகுதிகளும்
பிறப்பிலே உண்டு......!
அம்பிகா
ஒரு விவேகமணி
ஒலித்தார் வெற்றிமணி
சரித்திரம் படைப்பார்
நம்பு வீரமணி.....!

உன்
வீரம், விவேகம்
உச்சம் எட்டும்
பிரித்தாளும் எத்தனம்
திரிந்து போகும்
கிரீடம் வந்தே தீரும்
விதியை மாற்ற
எத்தனுக்கு வலுவில்லை....!
 
ஒன்றாய்ப் பயணிக்க
ஒன்றுகூடும் இளையோரே
இறையருள், நன்மக்கள்
ஆவலில் சேர்ந்திருக்க
அருகில் இருக்கும்
தவறிய வெற்றியைத் தடுமாறாமல்
கொண்டு வந்திடு....!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...