முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்காலம் மண்ணாகலாமா...

:          எதிர்காலம் மண்ணாகலாமா           8.5.2013
                            வே.ம. அருச்சுணன் 

நடந்து முடிந்த
பதின்மூன்றாவது தேர்தலில்
மூவினத்தின்
அடையாளம் தெரிந்தது.....!

மூன்று வந்தேறிகளுக்கும்
நிலைமை தெரியவில்லை
ஆட்டத்தை நிறுத்தவில்லை
வயிற்றுக்காக வாடிய மக்கள்
வந்த இடத்தில்
வகை தெரியாமல் வாழ்கின்றன.....!

இங்கே
ஏற்றம் தராது மந்திரத்தை
துணிவாய் முழங்குவதும்
ஒருவரைவொருவர்
தின்று ஏப்பமிட எண்ணுவதும்
வீண் வம்பு
சொன்னால் நம்பு.....!

எடுப்பது பிச்சை
பேசுவதோ கொச்சை
பேச்சில் ஒற்றுமை
நடப்பில் வேற்றுமை
அகம்பாவம்
தனக்கே எல்லாமென்ற
குறுகிய உள்ளம்
சிறக்குமா இந்த பெருநிலம்....?

கேடு கெட்ட  உள்ளமே
துன்மார்க்கனே
சுனாமி
எந்த உருவில்
வருமென்று தெரியுமா....?

முதுகொடிந்த
தமிழனுக்கு இன்னுமா
சோதனைகளும்....வேதனைகளும்......?

ஒரு சொல் கேளீர்
சீன சமூகம்
அவர்களோடு கூடிப்பழகு
ஒற்றுமையின் உச்சம் தெரியும்
போராடும் வல்லமை புரியும்
அவர்கள்
மொழி....பண்பாடு
கணமும் மறந்ததில்லை
எழிச்சியைக் கிஞ்சிற்றும்
துறந்ததில்லை.......!

யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
யாரையும் ஏற்பதும் இல்லை
சுயமாய் சிந்திப்பதும்
செயல்படுவதும்
அவர்களின் வெற்றிக் கவசங்கள்......!

உண்மை உணர்வீர்
இனிய வாழ்வு
மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்.....!

இளையோரே முன்வருவீர்
தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
அடிமை வாழ்வைத் துறந்தே
சுயமாய் வாழ்வு சிறக்க
சொந்த தொழில் புரிவோம்
அடிமைத்தொழிலை மறந்து
செல்வச் சீமானாகத் திகழ்வோம்......!

கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
உறக்கக்கூறுவோம்
ஒரே குரலில்......!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...