முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழைப் படி பக்தனே

புதுக்கவிதை:         தமிழைப்  படி  பக்தனே                          27.1.2013                                             வே.ம.அருச்சுணன்  நாட்டின் தொலைதூரத்திலிருந்து என்னைப் பக்தியோடு காண வந்த பக்தனே உன்னை ஒன்று கேட்பேன் தெளிவாகப் பதில் கூறு......! தமிழ்க்கடவுளே......! பத்துமலை முருகனே அன்பின் பிறப்பிடமே என் தெய்வமே உண்மைப் பக்தனான என்னிடம் கேள்வியா...... ? என்ன சொல்கிறாய் முருகா... ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே என் பக்திமீது சந்தேகமா முருகா.... ? விளக்கமாகக் கூறுங்கள்  பக்தனே......! நான் சொல்லப் போவதைக் கவனமுடன் கேள் நீ பேசும் தமிழைக் கேட்டேன் தமிழை நீ உச்சரிக்கும் முறையக் கேட்டேன் காதில்.......! ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறது......! முருகா......! இதுவென்ன சோதனை....... ?   என் தமிழ் உச்சரிப்பில் பிழையா.... ? பக்தா.....உண்மையைக்கூறு தமிழ்க்கடவுளான என்னை வணங்கும் பக்தனே நீ தமிழ்ப் படித்தாயா...... ? ...................................................! பக்தனே.........ஏன் மௌனமாகிவிட்டாய். ? உன் உடல

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பரிசளிப்பு விழா

Add caption

நேரம்

சிறுகதை:            நேரம்                                                                              வே.ம.அருச்சுணன் “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக்கிரம் விசியத்துக்கு வாங்க......!” “பதறாதத்காரியம் சிதறாதுன்னு சொல்லுவாங்க.....நான் சொல்றதப் பொறுமையாக் கேட்கனும்....!” “...................” “உன் உயிர் நண்பன் , சில வாலிபப் பசங்களோடு  அடிக்கடி ரெஸ்டோரன்ல , குடியும் கும்மாளமா மதுபோதையில இருக்கிறதப்  பார்க்கிறேன்! அவர்கள் எல்லாம் நல்ல