கவிதை: பணமூட்டை புகை மூட்டமானது வே.ம.அருச்சுணன் – மலேசியா சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ? உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு! ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது! மக்கள் அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும் புகைமூட்டக் கண்ணாமூச்சுகள் காற்றாய்ப் பறந்து போகும்! இயற்கைதனை அழிப்போர் இறைவனின் எதிரியென்போம் படைத்தவன் நமக்களித்த வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும் அரக்கனை அழிப்போம் பண
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்