கட்டுரை : பெரியோரே சிறியோருக்கு உதவுங்கள்! 18.5.2020 வே.ம.அருச்சுணன் இன்றைய இளையோரின் வாழ்வில் பல்வேறு சவால்கள் உள்ளடக்கிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். நமது இந்திய இளைஞர்கள் பலர் திக்குத்தெரியாதக் காட்டில் விடப்பட்டவர்கள் போல் செய்வதறியாது பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாழ்வை நரகமாக்கிக் கொள்கின்றவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்து வருவது அதர்ச்சியைத் தருகிறது. இதை கருத்தில கொண்டு பல நல்லுங்கள் மனமுவந்து அவர்களுக்கு உதவிக்கரங்களை நீட்டிவருகின்றனர்.இதனால் நமது இளைஞர்கள் பலர் பல்வேறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டு , இன்று பலதுறைகளில் சாதனைகள் புரிந்து வருவது கண்டு சற்று ஆறுதலாக இருக்கிறது. இளையோரின் வளர்ச்சியில் பெரியவர்களின் பங்கு அளப்பெரியது.இந்நாட்டில் வாழும் பிற இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாழ்வில் சிறந்த விளங்குவதற்கு முக்கியக் காரணம் அவர்களின் தேவையறிந்து பெரியோர்கள் வழங்கும் உதவிகளாகும். அவ்வாறு நாமும் நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பதுடன் தேவைப்படும
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்