கவிதை:
தொடரும்
அதிசயங்கள் 9.3.2020
வே.ம.அருச்சுணன்
ஒவ்வொரு விடியலும்
ஓங்கிவரும்
விசித்திரங்கள்
கௌவ்விடும் மர்மங்கள்
கலக்கிடும் தந்திரங்கள்
எவ்விடம் சென்றாலும்
ஏப்பமிடும் ஜாலங்கள்
தௌவ்விடும் திறத்தாலே
தப்பிடும் தலையுமே....!
மனிதரில் மாணிக்கமும்
மாசற்ற தங்கமும்
கனிவான ஏர்மனமும்
கூடிவாழ் கூர்மனமும்
தனியாத நல்லுறவும்
தாழ்விலா கூட்டுறவும்
குனிவிலா பெருவாழ்வும்
கவனத்தாலே கூடிவரும்.....!
பிறர்வாழ கைகொடுப்பீர்
பௌவியமாய்க் கையெடுப்பீர்
மறவாமல் நம்பிடுவீர்
மமதைகள் கலைத்திடுவீர்
துறவுநிலை ஏற்றிடுவீர்
தூயமனம் வாழ்த்திடுவீர்
இறவாதப் புகழேற்பீர்
இனவாதம் துறப்பினிலே...!
கருத்துகள்
கருத்துரையிடுக