‘ வந்தாய் , வென்றாய் , சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே ’ வே.ம.அருச்சுணன் வந்தாய் , வென்றாய் , சென்றாய் நீ எடுத்த அவதாரமா ? உழைப்பு .... உழைப்பு..... உழைப்பவனே உயர்ந்தவன் உலகுக்கு நீ உதாரணம் எல்.முத்து நீ நல்முத்து.........! உயிரும் உடலும் இரத்த வியர்வையில் தொண்டனுக்கும் நேரமுண்டு உண்ண , உறங்க , உல்லாசம் நேரமுண்டு , காலமுண்டு உனக்கோ உறங்கத்திலும் வேலையுண்டு மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்னே உன் நியதி......! பொன்னை விரும்பும் பூமியிலே தன்னை விரும்பும் மனிதனுண்டு உன்னை விரும்பும் பிறவியுண்டு மனிதம் விரும்பும் புத்தன் நீ நல்லோர் சபைதனிலே வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன் மாசற்ற குடும்பத்தலைவன்.........! வாழ்வில் கட்டிடக் கலைஞனாய்ப் பரிணாமத்தைக் கொண்டவனே பிரமிப்பை ஏற்படுத்தியவன் இலக்கியம் படைப்பிலும் திகைப்பை ஏற்படுத்தினாய் அவை என்றும் நிலைக்கும் மலேசிய இலக்கியமாய
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்