முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘வந்தாய், வென்றாய், சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே’

                        ‘ வந்தாய் , வென்றாய் , சென்றாய்                 செழுமைமிகு செர்டாங் முத்தே ’                                                                     வே.ம.அருச்சுணன்  வந்தாய் , வென்றாய் , சென்றாய் நீ எடுத்த அவதாரமா ? உழைப்பு .... உழைப்பு..... உழைப்பவனே உயர்ந்தவன் உலகுக்கு நீ உதாரணம் எல்.முத்து நீ நல்முத்து.........! உயிரும் உடலும் இரத்த வியர்வையில் தொண்டனுக்கும் நேரமுண்டு உண்ண , உறங்க , உல்லாசம் நேரமுண்டு , காலமுண்டு உனக்கோ உறங்கத்திலும் வேலையுண்டு மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்னே உன் நியதி......! பொன்னை விரும்பும் பூமியிலே தன்னை விரும்பும் மனிதனுண்டு உன்னை விரும்பும் பிறவியுண்டு மனிதம் விரும்பும் புத்தன் நீ நல்லோர் சபைதனிலே வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன் மாசற்ற குடும்பத்தலைவன்.........! வாழ்வில் கட்டிடக் கலைஞனாய்ப் பரிணாமத்தைக் கொண்டவனே பிரமிப்பை ஏற்படுத்தியவன் இலக்கியம் படைப்பிலும் திகைப்பை ஏற்படுத்தினாய் அவை என்றும் நிலைக்கும் மலேசிய இலக்கியமாய

அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

                   அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்                                       வே.ம.அருச்சுணன்  - மலேசியா        இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா..........! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்.......! அக்கினி பூக்களாய்க் கருத்துக் கருவூலங்கள் நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய் நாட்டின் தலைமகன் தமிழ் உள்ளங்களின் தவப்புதல்வன் ஆணவம் காணா அறிஞன் மனிதரில் மாமனிதர் மனுக்குலத்தின் பிதாமகன் முத்தானக் கருத்துக்கு மட்டுமே முகம் காட்டும் முகமூடி அணியா நெறியாளன்....! உனது விஞ்ஞானம் இந்திய மண்ணை உயர்த்தியது உனது தமிழ் உணர்வு உலகில் வாழும் தமிழ் இனத்தின் மாண்பை இமையத்தில் வைத்தது......! உன்னை நினைத்தால் நெஞ்சம் புடைக்கிறது நிறைவாகும் கனவால் உள்ளம் குதியிட்டு துள்ளுகிறது யாதும் ஊரே ;  யாவரும் கேளிர் ஐ.நா.சபையில் உனது குரல் தமிழனின் கம்பீரம் தெரிந்தது தேமதுர தமிழோசை