சிறுகதை: அப்படித்தான் வே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை , அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன் , காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள , பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை இரசித்தவாறு நடந்து செல்லும் அவர் , அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகிறது.அவரின் முகத்தில் என்றுமில்லா பதற்றமும் இறுக்கமும் தெரிந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர் அப்பள்ளிக்கு தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். துணைத்தலைமையாசிரியர் பிரியா அப்போது அறையினுள் நுழைகிறார். ” வணக்கம் சார்” இருக்கையில் அமர்கிறார். “வணக்கம் டீச்சர்........” கணினியை இயக்கியவாறு.
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்