முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிட்லண்ட்ஸ் தோட்ட எழுத்தாளர் டாக்டர் இராமசாமி மலையப்பன்


மிட்லண்ட்ஸ் தோட்ட எழுத்தாளர்
டாக்டர் இராமசாமி மலையப்பன்
வே.ம.அருச்சுணன் –மலேசியா


                                                 நியூ காசல் பல்கலைக்கழகத்தில்
எழுத்தாளர் மலையப்பன் இராமசாமி டாக்டர் பட்டம் பெற்றார் 

கிள்ளான், மிட்லண்ட்ஸ் தோட்டம் 70 ஆம் ஆண்டுகளில் பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. எழுத்துலகில் இன்றும் உலவிக்கொண்டிருக்கும்   எழுத்தாளர்களில்  வே.ம.அருச்சுணன், மூ.சீரியநாதன்,  கவிஞர் க.பத்மநாபன், கவிஞர் கருமுத்து.சொக்கநாதன்,ஆகியோரைக் குறிப்பிடலாம்.எடுத்த எடுப்பிலேயே தமிழ்மலர் நாளிதழிலில் யார் குற்றம் எனும் தலைப்பில் தொடர்கதை எழுதி தோட்ட எழுத்தாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியவர் திரு.ம.இராமசாமி. பின்னர் அவர் பல சிறுகதைகளை உள்ளூர் நாளிதழ்களில் எழுதினார். “உனக்கு சாவு வாராதோ”, வாய்மை, பாத்தியா என் மகனே, யாருக்கு யார் சுமை, மனம் படும் பாடு, இதய தாபம், சிரிக்கும் உள்ளங்கள், தப்புத்தாளங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நாடக நடிகராகவும்,நாடகங்களை எழுதியும் இயக்கியும் பல நாடகங்களை தமிழர் திருநாள் மேடைகளில் அரங்கேற்றியவர்.மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் அமரர் உயர்திரு ஆழி அருள்தாசன் அவர்கள் எழுதி இயக்கிய முல்லைத்தேர்,கடாரம் போன்ற நாடங்களில் இவர் சிறப்பாக நடித்ததுடன் தமிழகத்தில் அரங்கேறிய கடாரம்.




                      எழுத்தாளரைப் பாராட்டிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்


                                    
                                         
       
        கடாரம் நடகத்தில் நடித்த எழுத்தாளரைப்பாராட்டும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்



நாடகத்திலும் தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் பாராட்டினைப் பெற்றவர். எம்.ஜி.ஆர் அவர்களும் இவரது நடிப்புத் திறனைப் பாராட்டியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் எழுதிய பாடல்களை மேடைகளில் பாடி பாராட்டுகளைப் பெற்றவர்.
                                   
 கவிஞர் கண்ணதாசன் அவர்களுடன் எழுத்தாளர்


மிட்லண்ட்ஸ் தோட்ட சௌந்திரராஜன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பாகப்பாடிப் பல  பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். மலேசிய வானொலியிலும் பாடல்களைப் பாடி பரிசுகளைப் பெற்றுள்ளார்.
மேடையில் பாடும் எழுத்தாளர் ம.இராமசாமி

போட் கிள்ளானில் இயங்கிய கொண்டிருந்த தென்றல் இசைக்குழுவில் இணைந்து சுயமாகப் பாடல்களைப் புனைந்து இசையமைத்து பல மேடைகளில் பாடி மக்களைப் பரவசப்படுத்தியுள்ளார். பக்திப்பாடல்களின் தொகுப்பாகப் பல கேசட்டுகளை வெளியிட்டுள்ளார். இவற்றுள் கோடியூர் ஐயினார் கேசட் இவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.    

மிட்லண்ட்ஸ் விளையாட்டு மன்றத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். காற்பந்து  விளையாட்டில், இவ்வட்டாரத்தில் பலம்பொருந்திய குழுவாக பல ஆண்டுகள் வெற்றிநடை போட வைத்தவர்.



பிரதமர் துன் அப்துல் இராசாக் அவர்கள் விருது வழங்குகிறார் 
       
செம்பிறைச் சங்கத்தில் உயர் அதிகாரியாக எழுத்தாளர் ம.இராமசாமி ஆவார். கிள்ளான் செம்பிறைச் சங்கத்தின் தமிழ்ப்பிரிவுத்தலைவராகப் பொறுப்பேற்று பல தொண்டூழியப்பணிகளில் தம்மைமுழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். 



இவரது நீண்ட நாள் சேவையைப் பாராட்டி முன்னாள் பிரதமர் துன் அப்துல் இராக் அவர்கள் இவருக்குச் சிறந்த சேவைக்கான உயரிய விருதை வழங்கி சிறப்பித்தார்.

                                            
                                                    

                     
                                அன்புத்துணைவியார் திருமதி பார்வதியுடன் எழுத்தாளர்


திருமதி பார்வதி அவர்களை வாழ்க்கைத்துணைவியாக கரம் பற்றிய இவருக்கு சண்முகப்பிரியன் மற்றும் சந்திரப்பிரியா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.அப்பாவைப் போல் இவர்களும் நன்கு பாடும் திறன் பெற்றவர்கள். இவரது தம்பி கணேசன் மலையப்பன் அவர்களும் பக்திப்பாடல்களைப்  பாடுவதில் சிறந்து விளங்குவதுடன் மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகளை இவரது பிள்ளைகள்களும் இயக்கும் திறனையும் பெற்றவர்களாவர்.

                அலுவலக அதிகாரிகளுடன் எழுத்தாளர் விமானத்திலிருந்து கையசைக்கிறார்

இரவாங் பட்டணத்தில், அமைந்துள்ள பெரொடுவா மலேசிய கார் உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பின் தனது பணி சார்ந்த துறையில் மேற்கல்வியைத்  தொடர்ந்தார். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததன் பயனாக டாக்டர் பட்டம் பெற்றார். ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றை அமைத்து பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணிபுரிந்தவர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று அவர் சேவையை வழங்கி வந்தார்.
மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் 16.5.1999 ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் சங்கத்தின் ஆலோகர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற எழுத்தாளர் ம.இராமசாமி அவர்கள் சங்க வளர்ச்சிக்குப் பெரும் சேவையை வழங்கியுள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில், பள்ளி மண்டபத்துடன் பல்வேறு வசதிகளுடன் நவீனமானக் கட்டிடத்தைக்   கொண்ட பள்ளியாகத் தற்போது மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி விளங்கி வருகிறது. மேலும், இப்பள்ளி மாணவர்களுக்களின் நலன் கருதி, மாணவர்கள் பள்ளியில் தங்கி பயிலும் வகையில் விடுதி ஒன்றையும் கட்டி முடிக்கும் தருவாயில் இருக்கிறது.

கட்டுரையாளர் வே.ம.அருச்சுணன் அவர்களுடன் எழுத்தாளர் ம.இராமசாமி

1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மலர் பல்லாண்டுகள் சிறப்புடன் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் 1971 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ம. இராமசாமி அவர்கள் யார் குற்றம் என்ற தலைப்பில்  ஐந்து வாரங்கள் குறுநாவல் ஒன்றை எழுதி வாசகரிடையே  புகழ் பெற்றார்.48 ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ் மலர் புதுப் பொலிவுடன் வெளிவருவது மகிழ்ச்சியே.அன்றும் இன்றும் இந்நாளிதழ் வாசகர்களிடையே பெரும்செல்வாக்கை பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
பல தொடர்களை எழுத வேண்டும் என்ற அவரின் பேரவா நிறைவெய்தாத நிலையில், சிறிதுகாலம் நோய்வாய்ப் பட்டபின்  கடந்த,  4.6.2018 ஆம் நாள் காலமானார் என்ற செய்தி தமிழ் மலர் வாசகர்களை அதர்ச்சிக்குள்ளாகியதுடன், மிட்லண்ட்ஸ் தோட்டத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு ஓர் இலக்கியவாதியையும், பண்பட்டக் கலைஞரையும் இழந்து பெரும் துயரில் மூழ்கினர்.
இவர், தமிழ் மலர் ஞாயிறு இதழில்  22.11.1970 முதல் தொடராக எழுதிய, யார் குற்றம் என்ற நாவலும், சிறுகதைகளும் விரைவில் நூலாக்கும் முயற்சியில் அவரின் அன்புப்புதல்வர் சண்முகப்பிரியன் முனைப்பு காட்டுவது, எழுத்தாளர் ம.இராமசாமி அவர்களின் படைப்புகளைத்  தமிழ் மலர் வாசகர்கள் மீண்டும் வாசித்து மகிழும் தருணத்தை எண்ணி மகிழலாம்.

                                                   முற்றியது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை