பொங்குகவி நெடுமாறன் ************************************ பாப்பாவின் பாவலராம் பைந்தமிழ்க் காவலராம் தீப்பார்வை பாராத தெள்ளுதமிழ் நாவலராம் ! மூப்பிலும் குழந்தைகள் முன்னேறப் பாடிடுவார்! யாப்பறிந்தே மலையத்தில் பாப்புனையும் முரசவராம் ! பூப்போன்ற உளங்கொண்டார் பொங்குகவி நெடுமாறன் ! காப்பியமாய்க் களஞ்சியத்தை கனிவோடு வழங்கியவர் ! நாப்பொழியும் தமிழெல்லாம் நயம்மிக்கப் பண்ணாகும் ! கோப்பையின் மதுநாணும் கோமகனார் கவிகண்டே ! ******************************** எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் 14.1.2021. (14.1.2021 "பாப்பாவின் பாவலர் "முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளாகும்.)
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்